திருவாய்மொழி ஆறாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

style="text-align: center;">6ஆம் பத்து 3 ஆம் திருவாய்மொழி

3365

நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்,

வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்,

பல்வகையும் பரந்தபெரு மானென்னை யாள்வானை,

செல்வம்மல்கு குடித்திரு விண்ணகர்க் கண்டேனே. 6.3.1

 

3366

கண்டவின்பம் துன்பம் கலக்கங்களும் தேற்ற முமாய்,

தண்டமும் தண்மையும் தழலும் நிழலுமாய்,

கண்டுகோ டற்கரிய பெருமானென்னை யாள்வானூர்,

தெண்டிரைப் புனல்சூழ் திருவிண்ணகர் நன்னகரே. 6.3.2

 

3367

நகரமும் நாடுகளும் ஞானமும் மூடமுமாய்,

நிகரில்சூழ் சுடராயிரு ளாய்நில னாய்விசும்பாய்,

சிகரமா டங்கள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,

புகர்கொள் கீர்த்தியல்லாலில்லை யாவர்க்கும் புண்ணியமே. 6.3.3

 

3368

புண்ணியம் பாவம் புணர்ச்சிபிரி வென்றிவையாய்

எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மயாயல்லனாய்,

திண்ணமா டங்கள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,

கண்ணனின் னருளேகண்டு கொண்மின்கள் கைதவமே. 6.3.4

 

3369

கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்,

மெய்பொய் யிளமை முதுமைபுதுமை பழமையுமாய்,

செய்யதிண் மதிள்சூழ் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,

பெய்தகாவு கண்டீர் பெருந்தேவுடை மூவுலகே. 6.3.5

 

3370

மூவுலகங் களுமாய் அல்லனாயுகப் பாய்முனிவாய்,

பூவில்வாழ் மகளாய்த் தவ்வையாய்ப்பு ழாய்பழியாய்,

தேவர்மே வித்தெழும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,

பாவியேன் மனத்தே யுறைகின்ற பரஞ்சுடரே. 6.3.6

 

3371

பரஞ்சுடர் உடம்பாய் அழுக்குபதித்த வுடம்பாய்,

கரந்தும்தோன் றியும்நின்றும் கைதவங்கள் செய்யும் விண்ணோர்

சிரங்களால் வணங்கும் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,

வரங்கொள்பாத மல்லாலில்லை யாவர்க்கும் வன்சரணே. 6.3.7

 

3372

வன்சரண் சுரர்க்காய் அசுரர்க்குவெங் கூற்றமுமாய்,

தன்சரண் நிழற்கீ ழுலகம்வைத்தும் வையாதும்,

தென்சரண் திசைக்குத் திருவிண்ணகர்ச் சேர்ந்தபிரான்,

என்சரணென் கண்ணன் என்னையாளுடை என்னப்பனே. 6.3.8

 

3373

என்னப்பன் எனக்காயிகுளாய் என்னைப் பெற்றவளாய்,

பொன்னப்பன் மணியப்பன் முத்தப்பனென் அப்பனுமாய்,

மின்னப்பொன் மதிள்சூழ்திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன்,

தன்னொப்பா ரில்லப்பன் தந்தனன்தன தாள்நிழலே. 6.3.9

 

3374

நிழல்வெயில் சிறுமைபெருமை குறுமை நெடுமையுமாய்,

சுழல்வனநிற் பனமற்று மாயவை அல்லனுமாய்,

மழலைவாழ் வண்டுவாழ் திருவிண்ணகர் மன்னுபிரான்,

கழல்களன்றி மற்றோர் களைகணிலம் காண்மின்களே. 6.3.10

 

3375

காண்மின்க ளுலகீர். என்று கண்முகப் பேநிமிர்ந்த, தாள்

இணையன் தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன,

ஆணையா யிரத்துத்திரு விண்ணகர்ப்பத் தும்வல்லார்,

கோணையின்றி விண்ணோர்க் கொன்றுமாவர் குரவர்களே. 6.3.11

Leave a Reply