7ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

 

 

 

style="text-align: center;">7ஆம் பத்து 8ஆம் திருமொழி

1618

செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்

திருவடியி னிணைவருட முனிவ ரேத்த,

வங்கமலி தடங்கடலுள் அனந்த னென்னும்

வரியரவி னணைத்துயின்ற மாயோன் காண்மின்,

எங்குமலி நிறைபுகழ்நால் வேதம் ஐந்து

வள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை

அங்கமலத் தயனனையார் பயிலும் செல்வத்

தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே. (2) 7.8.1

1619

முன்னிவ்வுல கேழுமிருள் மண்டி யுண்ண

முனிவரொடு தானவர்கள் திகைப்ப, வந்து

பன்னுகலை நால்வேதப் பொருளை யெல்லாம்

பரிமுகமா யருளியவெம் பரமன் காண்மின்,

செந்நெல்மலி கதிர்க்கவரி வீசச் சங்கம்

அவைமுரலச் செங்கமல மலரை யேறி,

அன்னமலி பெடையோடும் அமரும் செல்வத்

தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.2

1620

குலத்தலைய மதவேழம் பொய்கை புக்குக்

கோள்முதலை பிடிக்க அதற் கனுங்கி நின்று,

நிலத்திகழும் மலர்ச்சுடரேய் சோதீ. என்ன

நெஞ்சிடர்தீர்த் தருளியவென் நிமலன் காண்மின்,

மலைத்திகழ்சந் தகில்கனக மணியும் கொண்டு

வந்துந்தி வயல்கள்தொறும் மடைகள் பாய,

அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்

தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.3

1621

சிலம்புமுதல் கலனணிந்தோர் செங்கண் குன்றம்

திகழ்ந்ததெனத் திருவுருவம் பன்றி யாகி,

இலங்குபுவி மடந்தைதனை யிடந்து புல்கி

எயிற்றிடைவைத் தருளியவெம் மீசன் காண்மின்,

புலம்புசிறை வண்டொலிப்பப் பூகம் தொக்க

பொழில்கடொறும் குயில்கூவ மயில்க ளால

அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந் தழகார் செல்வத்

தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.4

1622

சினமேவும் அடலரியி னுருவ மாகித்

திறல்மேவு மிரணியன் தாகம் கீண்டு,

மனமேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி

மாளவுயிர் வவ்வியவெம் மாயோன் காண்மின்,

இனமேவு வரிவளக்கை யேந்தும் கோவை

ஏய்வாய மரகதம்போல் கிளியி னின்சொல்,

அனமேவு நடைமடவார் பயிலும் செல்வத்

தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.5

1623

வானவர்தம் துயர்தீர வந்து தோன்றி

மாணுருவாய் மூவடிமா வலியை வேண்டி,

தானமர வேழுலகு மளந்த வென்றித்

தனிமுதல்சக் கரப்படையென் தலைவன் காண்மின்,

தேனமரும் பொழில்தழுவு மெழில்கொள் வீதிச்

செழுமாட மாளிகைகள் கூடந் தோறும்,

ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்

தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.6

1624

பந்தணைந்த மெல்விரலாள் சீதைக் காகிப்

பகலவன்மீ தியங்காத இலங்கை வேந்தன்,

அந்தமில்திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ

அடுகணையா லெய்துகந்த அம்மான் காண்மின்,

செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்

திசைமுகனே யனையவர்கள் செம்மை மிக்க,

அந்தணர்த மாகுதியின் புகையார் செல்வத்

தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.7

1625

கும்பமிகு மதவேழம் குலையக் கொம்பு

பறித்துமழ விடையடர்த்துக் குரவை கோத்து,

வம்பவிழும் மலர்க்குழலா ளாய்ச்சி வைத்த

தயிர்வெண்ணெ யுண்டுகந்த மாயோன் காண்மின்,

செம்பவள மரகதநன் முத்தம் காட்டத்

திகழ்பூகம் கதலிபல வளம்மிக் கெங்கும்,

அம்பொன்மதிள் பொழில்புடைசூழ்ந் தழகார் செல்வத்

தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.8

1626

ஊடேறு கஞ்சனொடு மல்லும் வில்லும்

ஒண்கரியு முருள்சகடு முடையச் செற்ற,

நீடேறு பெருவலித்தோ ளுடைய வென்றி

நிலவுபுகழ் நேமியங்கை நெடியோன் காண்மின்,

சேடேறு பொழில்தழுவு மெழில்கொள் வீதித்

திருவிழவில் மணியணிந்த திண்ணை தோறும்

ஆடேறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்

தணியழுந்தூர் நின்றுகந்த அமரர் கோவே 7.8.9

1627

பன்றியாய் மீனாகி யரியாய்ப் பாரைப்

படைத்துக்காத் துண்டுமிழ்ந்த பரமன் றன்னை,

அன்றமரர்க் கதிபதியும் அயனும் சேயும்

அடிபணிய அணியழுந்தூர் நின்ற கோவை,

கன்றிநெடு வேல்வலவ னாலி நாடன்

கலிகன்றி யொலிசெய்த வின்பப் பாடல்,

ஒன்றினொடு நான்குமோ ரைந்தும் வல்லார்

ஒலிகடல்சூ ழுலகாளு மும்பர் தாமே. (2) 7.8. 10

Leave a Reply