முதல் திருவந்தாதி

பொய்கையாழ்வார்


2112:

புரியொருகை பற்றியோர் பொன்னாழி யேந்தி,

அரியுருவும் ஆளுருவுமாகி, – எரியுருவ

வண்ண்த்தான் மார்ப்பிடந்த மாலடியை அல்லால், மற்

றெண்ண்த்தா னாமோ இமை? 3 1

 

2113:

இமையாத கண்ணால் இருளகல நோக்கி,

அமையாப் பொறிபுலன்க ளைந்தும் – நமையாமல்,

ஆகத் தணைப்பா ரணைவரே, ஆயிரவாய்

நாகத் தணையான் நகர். 32

 

2114:

நகர மருள்புரிந்து நான்முகற்கு, பூமேல்

பகர மறைபயந்த பண்பன், – பெயரினையே

புந்தியால் சிந்தியா தோதி உருவெண்ணும்,

அந்தியா லாம்பனங் கென்? 33

 

2115:

என்னொருவர் மெய்யென்பர் ஏழுலகுண்டு ஆலிலையில்

முன்னொருவ னாய முகில்வண்ணா, – நின்னுருகிப்

பேய்த்தாய் முலைதந்தாள் பேர்ந்திலளால், பேரமர்க்கண்

ஆய்த்தாய் முலைதந்த ஆறு? 34

 

2116:

ஆறிய அன்பில் அடியார்தம் ஆர்வத்தால்,

கூறிய குற்றமாக் கொள்ளல்நீ – தேறி,

நெடியோய். அடியடைதற் கன்றே,ஈ ரைந்து

முடியான் படைத்த முரண்? 35

 

2117:

முரணை வலிதொலைதற் காமன்றே, முன்னம்

தரணி தனதாகத் தானே – இரணியனைப்

புண்நிரந்த வள்ளுகிரால் பொன்னாழிக் கையால்,நீ

மண்ணிரந்து கொண்ட வகை? 36

 

2118:

வகையறு _ண்கேள்வி வாய்வார்கள், நாளும்

புகைவிளக்கும் பூம்புனலும் ஏந்தி, – திசைதிசையின்

வேதியர்கள் சென்றிறைஞ்சும் வேங்கடமே, வெண்சங்கம்

ஊதியவாய் மாலுகந்த வூர். 37

 

2119:

ஊரும் வரியரவம் ஒண்குறவர் மால்யானை,

பேர எறிந்த பெருமணியை, – காருடைய

மின்னென்று புற்றடையும் வேங்கடமே, மேலசுரர்

என்னென்ற மால திடம். 38

 

2120:

இடந்தது பூமி எடுத்தது குன்றம்,

கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, – கிடந்ததுவும்

நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே,

பேரோத வண்ணர் பெரிது. 39

 

2121:

பெருவில் பகழிக் குறவர்கைச் செந்தீ

வெருவிப் புனம்துறந்த வேழம், – இருவிசும்பில்

மீன்வீழக் கண்டஞ்சும் வேங்கடமே, மேலசுரர்

கோன்வீழ கண்டுகந்தான் குன்று. 40

Leave a Reply