சனிக் கிழமையன்று செய்யும் மகா பிரதோஷ தரிசனத்தால் 5 வருடங்கள் சிவாலயம் சென்ற பலன் கிடைக்கும். அடுத்தடுத்து இரண்டு சனி பிரதோஷங்களை அனுசரித்தால் ‘அர்த்தநாரி’ பிரதோஷமாகும். இதனால் பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். திருமணத் தடைகள் விலகும்; தவறவிட்ட செல்வம் மீண்டும் கை வந்து சேரும். பிரதோஷ தினத்தன்று கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்தால் சிவன் - பார்வதியுடன் முருகப் பெருமானின் அருளும் கிடைக்கும். இதனை ‘ஸ்கந்த பிரதோஷம்’ என்று கூறுவார்கள். ‘விஷம்’ என்பது பிறவித் துன்பம். பிரதோஷ தரிசனத்தால் அத்துன்பம் நீங்கும். அதுவும் மிகுந்த சிறப்புடைய சனி பிரதோஷ தினத்தில் தோன்றும் இந்த ஆங்கிலப் புத்தாண்டு, வாசகர்களுக்கு எல்லா வளங்களையும் வாரி வழங்க வேண்டுமென்று வாழ்த்துகிறோம். இனி ராசி வாரியாக புத்தாண்டு வருடப் பலன்களைக் காண்போம்.
![](https://i0.wp.com/deivatamil.com/wp-content/uploads/2024/06/deivatamil-fallback-image.jpg?fit=1200%2C675&ssl=1)