திருமாலை

தொண்டரடிப்பொடியார்

912:

வானுளா ரறிய லாகா வானவா. என்ப ராகில்,
தேனுலாந் துளப மாலைச் சென்னியாய். என்ப ராகில்,
ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும்,
போனகம் செய்த சேடம் தருவரேல் புனித மன்றே? (41)

913 :
பழுதிலா வொழுக லாற்றுப் பலசதுப் பேதி மார்கள்,
இழிகுலத் தவர்க ளேலும் எம்மடி யார்க ளாகில்,
தொழுமினீர் கொடுமின் கொள்மின் என்றுநின் னோடு மொக்க,
வழிபட வருளி னாய்போன்ம் மதிள்திரு வரங்கத் தானே. (42)

913:
அமரவோ ரங்க மாறும் வேதமோர் நான்கு மோதி,
தமர்களில் தலைவ ராய சாதியந் தணர்க ளேலும்,
நுமர்களைப் பழிப்ப ராகில் நொடிப்பதோ ரளவில், ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் அரங்கமா நகரு ளானே. (43)

915:
பெண்ணுலாம் சடையி னானும் பிரமனு முன்னைக் காண்பான்,
எண்ணிலா வூழி யூழி தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறா, உன்னை யென்னோ களைகணாக் கருது மாறே. (2) (44)

916:
வளவெழும் தவள மாட மதுரைமா நகரந் தன்னுள்,
கவளமால் யானை கொன்ற கண்ணனை அரங்க மாலை,
துவளத்தொண் டாய தொல்சீர்த் தொண்டர டிப்பொ டிசொல்,
இளையபுன் கவிதை யேலும் எம்பிறார் கினிய வாறே. (2) (45)


தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்

 

Leave a Reply