பெரியாழ்வார் திருமொழி முதல் பத்து

பெரியாழ்வார்

 

 

ஏழாம் திருமொழி – தொடர்சங்கிலிகை

(தளர் நடை நடத்தல், தளர் நடைப் பருவம்)

அறுசீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்

 

86:

தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப

படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல்

உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க

தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி தளர்நடைநடவானோ. (2) 1.

 

87:

செக்கரிடைநுனிக்கொம்பில்தோன்றும் சிறுபிறைமுளைபோல

நக்கசெந்துவர்வாய்த்திண்ணைமீதே நளிர்வெண்பல்முளையிலக

அக்குவடமுடுத்துஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்

தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. 2.

 

88:

மின்னுக்கொடியும்ஓர்வெண்திங்களும் சூழ்பரிவேடமுமாய்

பின்னல்துலங்கும்அரசிலையும் பீதகச்சிற்றாடையொடும்

மின்னில்பொலிந்ததோர்கார்முகில்போலக் கழுத்திணில்காறையொடும்

தன்னில்பொலிந்தஇருடீகேசன் தளர்நடைநடவானோ. 3 .

 

89:

கன்னற்குடம்திறந்தலொத்தூறிக் கணகணசிரித்துவந்து

முன்வந்துநின்றுமுத்தம்தரும் என்முகில்வண்ணன்திருமார்வன்

தன்னைப்பெற்றேற்குத்தன்வாயமுதம்தந்து என்னைத்தளிர்ப்பிக்கின்றான்

தன்னெற்றுமாற்றலர்தலைகள்மீதே தளர்நடைநடவானோ. 4.

 

90:

முன்னலோர்வெள்ளிப்பெருமலைக்குட்டன் மொடுமொடுவிரைந்தோட

பின்னைத்தொடர்ந்ததோர்கருமலைக்குட்டன் பெயர்ந்தடியிடுவதுபோல்

பன்னியுலகம்பரவியோவாப் புகழ்ப்பலதேவனென்னும்

தன்நம்பியோடப்பின்கூடச்செல்வான் தளர்நடைநடவானோ. 5.

 

91:

ஒருகாலில்சங்குஒருகாலில்சக்கரம் உள்ளடிபொறித்தமைந்த

இருகாலும்கொண்டுஅங்கங்குஎழுதினாற்போல் இலச்சினைபடநடந்து

பெருகாநின்றஇன்பவெள்ளத்தின்மேல் பின்னையும்பெய்துபெய்து

கருகார்க்கடல்வண்ணன்காமர்தாதை தளர்நடைநடவானோ. 6.

 

92:

படர்பங்கயமலர்வாய்நெகிழப் பனிபடுசிறுதுளிபோல்

இடங்கொண்டசெவ்வாயூறியூறி இற்றிற்றுவீழநின்று

கடுஞ்சேக்கழுத்தின்மணிக்குரல்போல் உடைமணிகணகணென

தடந்தாளினைகொண்டுசார்ங்கபாணி தளர்நடைநடவானோ. 7.

 

93:

பக்கம்கருஞ்சிறுப்பாறைமீதே அருவிகள்பகர்ந்தனைய

அக்குவடமிழிந்தேறித்தாழ அணியல்குல்புடைபெயர

மக்களுலகினில்பெய்தறியா மணிக்குழவியுருவின்

தக்கமாமணிவண்ணன்வாசுதேவன் தளர்நடைநடவானோ. 8.

 

94:

வெண்புழுதிமேல்பெய்துகொண்டளைந்ததோர் வேழத்தின்கருங்கன்றுபோல்

தெண்புழுதியாடித்திரிவிக்கிரமன் சிறுபுகர்படவியர்த்து

ஒண்போதலர்கமலச்சிறுக்காலுரைத்து ஒன்றும்நோவாமே

தண்போதுகொண்டதவிசின்மீதே தளர்நடைநடவானோ. 9.

 

95:

திரைநீர்ச்சந்திரமண்டலம்போல் செங்கண்மால்கேசவன் தன்

திருநீர்முகத்துத்துலங்குசுட்டி திகழ்ந்தெங்கும்புடைபெயர

பெருநீர்த்திரையெழுகங்கையிலும் பெரியதோர்தீர்த்தபலம்

தருநீர் சிறுச்சண்ணம்துள்ளம்சோரத் தளர்நடைநடவானோ. 10.

 

96:

ஆயர்குலத்தினில்வந்துதோன்றிய அஞ்சனவண்ணன்தன்னை

தாயர்மகிழஒன்னார்தளரத் தளர்நடைநடந்ததனை

வேயர்புகழ்விட்டுசித்தன் சீரால்விரித்தனஉரைக்கவல்லார்

மாயன்மணிவண்ணன்தாள்பணியும் மக்களைப்பெறுவார்களே. 11.

 

 

 

Leave a Reply