4ஆம் பத்து

திருமங்கையாழ்வார்

style="text-align: center;">4ஆம் பத்து 9ஆம் திருமொழி

1328

நும்மைத் தொழுதோம் நுந்தம் பணிசெய் திருக்கும் நும்மடியோம்,

இம்மைக் கின்பம் பெற்றோ மெந்தாய் இந்த ளூரீரே,

எம்மைக் கடிதாக் கரும மருளி ஆவா வென்றிரங்கி,

நம்மை யொருகால் காட்டி நடந்தால் நாங்க ளுய்யோமே? (4.9.1)

 

1329

சிந்தை தன்னுள் நீங்கா திருந்த திருவே மருவினிய

மைந்தா, அந்த ணாலி மாலே. சோலை மழகளிறே

நந்தா விளக்கின் சுடரே. நறையூர் நின்ற நம்பீ, என்

எந்தாய். இந்த ளூராய். அடியேற் கிறையு மிரங்காயே. (4.9.2)

 

1330

பேசு கின்ற திதுவே வைய மீரடி யாலளந்த,

மூசி வண்டு முரலும கண்ணி முடியீர், உம்மைக்காணும்

ஆசை யென்னும் கடலில் வீழ்ந்திங் கயர்ந்தோம், அயலாரும்

ஏசு கின்ற திதுவே காணும் இந்த ளூரீரே. (4.9.3)

 

1331

ஆசை வழுவா தேத்து எமக்கிங் கிழுக்காய்த்து, அடியோர்க்குத்

தேச மறிய வுமக்கே யாளாய்த் திரிகின் றோமுக்கு,

காசி னொளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்

வாசி வல்லீர் இந்த ளூரீர் வாழ்ந்தே போம்நீரே. (4.9.4)

 

1332

தீயெம் பெருமான் நீரெம் பெருமான் திசையு மிருநிலனு

மாய், எம் பெருமா னாகி நின்றா லடியோம் காணோமால்,

தாயெம் பெருமான் தந்தை தந்தை யாவீர், அடியேமுக்-

கேயெம் பெருமா னல்லீ ரோநீர் இந்த ளூரீரே. (4.9.5)

 

1333

சொல்லா தொழிய கில்லேன் அறிந்த சொல்லில், நும்மடியார்,

எல்லா ரோடு மொக்க வெண்ணி யிருந்தீ ரடியேனை,

நல்ல ரறிவீர் தீயா ரறிவீர் நமக்கிவ் வுலகத்தில்,

எல்லா மறிவீ ரீதே யறியீர் இந்த ளூரீரே. (4.9.6)

 

1334

மாட்டீ ரானீர் பணிநீர் கொள்ள எம்மைப் பணியறியா

விட்டீர், இதனை வேறே சொன்னோம் இந்த ளூரீரே,

காட்டீ ரானீர் நுந்த மடிக்கள் காட்டில் உமக்கிந்த,

நாட்டே வந்து தொண்டரான நாங்க ளுய்யோமே (4.9.7)

 

1335

முன்னை வண்ணம் பாலின் வண்ணம் முழுதும் நிலைநின்ற,

பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம் வண்ண மெண்ணுங்கால்,

பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம் புரையுந் திருமேனி,

இன்ன வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே. (4.9.8)

 

1336

எந்தை தந்தை தம்மா னென்றென் றெமெரே றெமரெ ழேளவும்,

வந்து நின்ற தொண்டரோர்க்கே வாசி வல்லீரால்,

சிந்தை தன்னுள் முந்தி நிற்றிர் சிறிதும் திருமேனி,

இந்த வண்ண மென்று காட்டீர் இந்த ளூரீரே (4.9.9)

 

1337

ஏரார் பொழில்சூழ் இந்த ளூரி லெந்தை பெருமானை,

காரார் புறவில் மங்கை வேந்தன் கலிய னொலிசெய்த,

சீரா ரின்சொல் மாலை கற்றுத் திரிவா ருலகத்து,

ஆரா ரவரே யமரர்க் கென்று மமர ராவாரே (4.9.10)

Leave a Reply