மதுரை ஆலயங்களில் மஹா சிவராத்திரி; ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சங்காபிஷேகம்

மதுரை இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் கோலாகலம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்

மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு இன்று 1008 சங்காபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதில், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சிவபெருமானின் அருளை வேண்டி வழிபாடு செய்யக்கூடிய மிக முக்கிய நாளாக மகா சிவராத்திரி திருநாள் விளங்கி வரும் நிலையில், சிவபெருமானை வழிபட்டால் அனைத்து பாவங்களும் விலகும் என்பது ஐதீகமாக கருதப்படுவதால் மதுரை கோவில்களில் சிவராத்திரி ஒட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அந்த வகையில் பூலோக கைலாயம் என அழைக்கப்படும் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் மஹா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு , 1008 சங்காபிஷேகம் கோவில் வளாகம் கொடி மரம் அருகில் உள்ள நந்தி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த சங்காபிஷேகத்தில் 1008 சங்குகள் லிங்க வடிவில் அடுக்கி வைக்கப்பட்டு அதில் புனித நீர் மற்றும் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் ஹோமங்கள் வளர்க்கப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.

இதனை அடுத்து மங்கள வாத்தியங்கள் முழங்கிட புனித நீர் குடங்கள் கொண்டும், பூஜையில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த சங்குகளில் இருந்த புனித நீர் கொண்டும், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு மஹா தீபாராதனை காட்டப்பட்டது . நிகழ்வில் ,ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர் .

சோழவந்தானில் சிவராத்திரி விழா

சோழவந்தான் பகுதி கோவில்களில் சிவராத்திரி விழா ஏராளமான பொதுமக்கள் இரவு முழுவதும் சிவனை தரிசித்து சென்றனர்.

சிவராத்திரி விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் இரவு முழுவதும் பொதுமக்கள் கோவிலில் தங்கி சிவனை தரிசனம் செய்தனர் தொடர்ந்து பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் வைகை ஆற்றங்கரையில் உள்ள பிரளயநாத சிவன் கோவிலில் சிவனுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று தீபாரதனைகள் நடைபெற்றது இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிவனை இரவு முழுவதும் தங்கி தரிசனம் செய்தனர். மிகவும் பழமை வாய்ந்த பாண்டிய மன்னர் காலத்து திருத்தலமான திருவேடகம் ஏடகநாதர் ஏலவார்க் குழலி கோவிலில் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் பொதுமக்கள் கோவில் வளாகத்தில் தங்கி சிவனை தரிசனம் செய்தனர்.

அனைவருக்கும் கோவில் சார்பில் தேநீர் பிஸ்கட் போன்ற உணவுப் பொருட்கள் இரவு முழுவதும் வழங்கப்பட்டது சிறுவர் சிறுமிகள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது பொதுமக்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்கு அதிகாரிகள் பல்வேறு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

இதே போல் சோழவந்தான் ரயில்வே பீடர் ரோட்டில் அமைந்துள்ள ஆதி சிவன் கோவிலில் இரவு முழுவதும் பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது தென்கரை அகிலாண்டேஸ்வரி கோவில் மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மேலக்கால் ஈஸ்வரன் கோவில் உள்பட சோழவந்தான் பகுதிகளில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் இரவு முழுவதும் சிவனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்றது அனைத்து சிவாலயங்களிலும் ஆயிரகணக்கில் பக்தர்கள் பொதுமக்கள் இரவு முழுவதும் தங்கி சிவனை தரிசனம் செய்தனர்.

மாசி மஹா சிவராத்ரி விழா: திரண்ட பக்தர்கள்.

மாசி சிவராத்திரியை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் குல தெய்வ கோவில்களில் விடிய விடிய லட்சக்கணக்கான மக்கள் குவிந்து சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100க்கும் அதிகமான குல தெய்வ கோவில்கள் உள்ளன. பெரும்பாலும் மாசி சிவராத்திரி என்றால் சிவனுக்கு உகந்த தினமாக சிவன் கோவில்களில் பக்தர்கள் அதிகம் கூடும் சூழலில், தென் மாவட்டங்களில் குறிப்பாக உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மக்கள் மாசி சிவராத்திரி தினத்தில் முன்னோர் வழிபாட்டு முறையான குல தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவதை காலம் காலமாக செய்து வருகின்றனர்.

அதன்படி, மாசி சிவராத்திரியை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள குல தெய்வ கோவில்களுக்கு லட்சக்கணக்கான மக்கள் வந்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். மேலும் , பொங்கல் வைத்தும், மொட்டை போட்டும், கிடா வெட்டியும் தங்கள் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

இந்த மாசி திருவிழாவிற்காக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வசிக்கும் இந்த குல தெய்வங்களுக்கு பாத்தியப்பட்ட சொந்தங்கள் லட்சக் கணக்கானோர் ஒன்று சேர்ந்து இரவு முழுவதும் விடிய விடிய திருவிழா எடுத்து முன்னோர் வழிபாட்டு முறையை பின்பற்றி வருகின்றனர்.

மதுரை அருகே சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி ஆலயத்தில், மகா சிவாராத்ரியை முன்னிட்டு, பிரளயநாதர், சௌந்தர நாயகி, புஷ்பகேசிக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது. இதில் தொழிலதிபர் எம். வி. எம். மணி, நிர்வாக அதிகாரி ச. இளமதி, பள்ளித் தாளாளர் மருதுபாண்டியன், கவுன்சிலர் வள்ளி மயில், கோயில் கணக்கர் சி. பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே போல சோழவந்தான் ஜெனகை மாரியம்மன், முதலைக் குளம் கருப்புச் சாமி கோயில், திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூல நாதர், மதுரை அண்ணாநகர் யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயம், ஆவின் பால விநாயகர் ஆலயம், மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர், சௌபாக்கிய விநாயகர், மதுரை வைகை காலனி கிழக்கு சக்தி மாரியம்மன்
ஆலயங்களில், மஹா சிவராத்ரி பூஜைகள் நடைபெற்றது.

Leave a Reply