நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

ஆடி நிறைபுத்தரிசி பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஞாயிற்றுக்கிழமை மாலை திறக்கப்பட்டது. நாளை திங்கட்கிழமை அதிகாலை 5.45மணி முதல் காலை 6.30வரை நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும்.

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்குவதற்காக இந்த பூஜை நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில் நிறைபுத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. கோவில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து வைத்தார். நாளை அதிகாலை 5.45க்கும் 6.30 மணிக்கும் இடையே நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். இதற்காக சபரிமலை மற்றும் திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமான பாலக்காடு மற்றும் அச்சன்கோவில் ஆகிய இடங்களில் இருந்து புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் கொண்டு வரப்பட்டது

இந்த நெற்கதிர்கள் பூஜை செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்குப் பின்னர் நாளை இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். மீண்டும் ஆவணி மாத பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்படும்.

விவசாயம் செழிக்கவும், மக்களின் வறுமை நீங்கவும், உலக மக்களின் பசி. பஞ்சம் தீரவும் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் வருடந்தோறும் நிறைப்புத்தரிசி பூஜை நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், சபரிமலை சுவாமி ஐயப்பன் கோயிலில் நிறைப்புத்தரிசி பூஜை நாளை ஆகஸ்ட் 12 அன்று நடைபெற உள்ளது. இந்த பூஜைக்கான
நெற்கதிர்கள் இன்று காலை கேரள மாநிலம் அச்சன் கோயிலில் இருந்து சபரிமலைக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.

அச்சன் கோயிலில் இருந்து இன்று காலை 5 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட திருவாபரணப் பெட்டி வாகனத்தில் நிறைப்புத்தரிசி நெற்கதிர்கள் ஏற்றப்பட்டு சபரிமலைக்கு ஊர்வலம் தொடங்கியது. காலை ஆறு மணி அளவில் செங்கோட்டை விரைவு பேருந்து பணிமனை பகுதியில் நிறைப் புத்தரிசி ஊர்வலத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, கோட்டைவாசல் கருப்பசாமி கோயில் வழியாக ஆரியங்காவு ஐயப்பன் கோயில், புனலூர் கிருஷ்ணன் கோயில், பத்தினம் திட்டா, நிலக்கல் உள்ளிட்ட முக்கிய திருக்கோயில்கள் ஆகியவற்றின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊர்வலம் செல்லும் வழியில் 36 கோயில்களுக்கு நிறைப்புத்தரிசி நெற்கதிர்கள் வழங்கப்பட்டது. மாலை இந்த ஊர்வலம் பம்பை சென்றடைந்து.அங்கிருந்து நடைபயணமாக நெற்கதிர்கள் சபரிமலை அய்யப்பன் கோயில்க்கு கொண்டு செல்லப்பட்டு தேவசம் போர்டு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நாளை அதிகாலை 4 மணிக்கு சுவாமி ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனத்திற்கு பிறகு நெற்கதிர்களுக்கு பூஜை செய்யப்பட்டு கருவறை உள்ளே கொண்டு சென்று அடுக்கப்படும். பிறகு 5.45 மணி முதல் 6.30 மணி வரை நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து நெற்கதிர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். அதையடுத்து நிறைப்புத்தரிசி நெற்கதிர்கள் கைக்குத்தல் மூலம் அரிசி ஆக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு அரிசி பாயசம் நெய்வேத்தியம் செய்து படைக்கப்படும். பிறகு பக்தர்களுக்கு அந்தப் பிரசாதம் விநியோகிக்கப்படும். இதுவே சபரிமலை ஐயப்பன் கோயிலில் நிறைப்புத்தரிசி பூஜை என்று அழைக்கப்படுகிறது.

ராஜபாளையத்தில் இருந்து கேரளாவில் உள்ள முக்கிய கோயில்களில் நடைபெறும் நிறைப்புத்தரிசி பூஜைக்காக 120 கட்டு நெற்கதிர்கள் கொண்டு செல்லப்பட்டது.

கேரள மாநிலத்தில் ஆவணி மாதம் நடைபெறும் மலையாள புத்தாண்டு விழாவுக்கு முன்னதாக ஆடி மாதத்தில் முக்கிய கோயில்களில் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெறுவது வழக்கம். விவசாயம் செழிப்பதற்காக நெற்கதிர்கள் கோயிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு விவசாயிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கப்படும்.

கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னதாக திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவராக இருந்த பிரையார் கோபாலகிருஷ்ணன் அனுமதி வழங்கியதன் பேரில் நிறைப்புத்தரிசி பூஜைக்கான நெற் கதிர்கள் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்டது.

ஆக12 திங்கட்கிழமை காலை அச்சன்கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழா, புனலூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயில், ஆரண்முழா பார்த்தசாரதி கோயில், பந்தளம் ஐயப்பன் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் நிறைப்புத்தரிசி பூஜை நடைபெற உள்ளது.

இதற்காக ராஜபாளையம் ஐயப்ப‌பக்தர்கள் குழு மற்றும் நாகராஜன் குழுவினர் சார்பில் 120 கட்டுகள் நெற்கதிர் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. கட்டி வைக்கப்பட்ட கட்டுகள் அனைத்தும் 3 வாகனங்களில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்பட்டு 30 கோயில்களில் வழங்கப்பட்டதாக ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாகராஜன் தெரிவித்தார்.

author avatar

Leave a Reply