பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

பழனியில் நடைபெறும் முக்கிய விழாக்களில் தைப்பூசமும், பங்குனி உத்திரமும் முக்கியமான விழாக்களாகும். இதில் பங்குனி உத்திரத் திருவிழா, திருஆவினன்குடி கோயிலில் வரும் மார்ச் 13 காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

10 நாள்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி தந்த சப்பரம், வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடா, தங்க மயில், தங்கக் குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் புறப்பாடு செய்து நான்கு கிரிவீதிகளில் உலா எழுந்தருள்கிறார்.

மார்ச் 18-ம் தேதி இரவு திருஆவினன்குடி கோயில் அருகே திருக்கல்யாணமும், அதனைத் தொடர்ந்து வெள்ளித்தேர் உலாவும் விமரிசையாக நடை பெறவுள்ளது. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திரத் தேரோட்டம் மார்ச் 19-ம் தேதி நடைபெறுகிறது

Leave a Reply