கோயில்களில் ஜூலை 1ல் சனி மகா பிரதோஷ விழா!

செய்திகள்

– Advertisement – 682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

– Advertisement –

மதுரை: கோயில்களின் ஜூலை 1-ஆம் தேதி மாலை சனி மகா பிரதோஷ விழா நடைபெறுகிறது. பிரதோஷமானது, திங்கள்கிழமை சோமவாரம் மற்றும் சனி மகா பிரதோஷ நாட்களில் பக்தர்கள் ஆலயத்திற்கு சென்று சிவன் மற்றும் நந்திகேஸ்வரனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் செய்வது வழக்கம்.

அதன்படி ,ஜூலை 1-ஆம் தேதி சனிக்கிழமை மாலை, கோயில்களில் சனி மகா பிரதோஷ விழா நடைபெறுகிறது. மதுரை அருகே உள்ள சோழவந்தான் விசாக நட்சத்திர சலாமாக விளங்கும் பிரளயநாத சுவாமி சிவன் ஆலயத்தில், ஜூலை 1-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் சனி மகா பிரதோஷ விழா வெகு சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

இதை ஒட்டி, திருக்கோயில் அமைந்துள்ள நரசிம்மர், சனீஸ் லிங்கம், நந்திகேஸ்வரன் மற்றும் சிவபெருமானுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேர்ச்சனை வழிபாடுகள் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து, சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் அலங்காரமாகி கோயில் பிராகாரத்தில் வலம் வந்து பக்தருக்கு காட்சியளிப்பர்.

இதை அடுத்து, தொழில் அதிபர் எம். வி.எம். மணி, பள்ளி தாளாளர் டாக்டர் எம். மருது பாண்டியன், கோயில் தக்கார் இளமதி ஆகியோர்கள் அன்னதானம் வழங்குவர். விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் இத்த திருக்கோவிலில் பக்தர்கள், சிவன் மற்றும் சனீஸ் லிங்கத்திற்கு விளக்குகளை ஏற்றி தங்கள் நேர்த்தி கடனை செலுத்துவர். இதேபோன்று, மதுரையில் இம்மையில் நன்மை தருவார், பழைய சொக்கநாதர், திருவாப்புடையார் திருக்கோவில், தெப்பக்குளம் முத்தீஸ்வரர், மதுரை அண்ணா நகர் சர்வேஸ்வர ஆலயம், மதுரை மேலமடை சௌபாக்கிய விநாயகர் ஆலயம், ஆவின் செல்வ விநாயகர் ஆலயம், ஞான சித்தி விநாயகர் ஆலயம், ஆகிய ஆலயங்களில் சனி மகா பிரதோஷ விழாவானது வெகு சிறப்பாக நடைபெற உள்ளது .

அன்றைய தினத்தில் சிவன் மற்றும் அம்பாளை தரிசித்தால், சகல நன்மைகளும் கிட்டும் என பக்தர்கள் நம்பிக்கை.
மேலும், சனி மகா பிரதோஷ அன்று சுவாமி அம்பாளை வலம் வந்து விளக்கேற்றி வழிபட்டால், துன்பங்கள் நீங்கும் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் மற்றும் பிரதோஷ விழாவிற்கு குழுவினர் மிகச் சிறப்பாக செய்து வருகின்றனர்.

– Advertisement –

Leave a Reply