இந்த செய்தியை / கட்டுரையை ஆங்கிலத்தில் அல்லது மற்ற இந்திய மொழிகளில் படிக்க…
![பங்குனி உற்சவம் சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு 1 - Dhinasari Tamil IMG 20230325 WA0021 1 - Dhinasari Tamil](https://i0.wp.com/www.deivatamil.com/wp-content/uploads/2023/03/e0aeaae0ae99e0af8de0ae95e0af81e0aea9e0aebf-e0ae89e0aeb1e0af8de0ae9ae0aeb5e0aeaee0af8d-e0ae9ae0aeaae0aeb0e0aebfe0aeaee0aeb2e0af88.jpg?resize=640%2C853&ssl=1)
ஐயப்பனின் ஜென்மதினம் பங்குனி உத்திரம் விழாவுக்காக சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. 27-ந்தேதி பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது. ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும். ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படும்.
![பங்குனி உற்சவம் சபரிமலை கோவில் நடை நாளை திறப்பு 2 - Dhinasari Tamil FB IMG 1679721823018 - Dhinasari Tamil](https://i0.wp.com/www.deivatamil.com/wp-content/uploads/2023/03/e0aeaae0ae99e0af8de0ae95e0af81e0aea9e0aebf-e0ae89e0aeb1e0af8de0ae9ae0aeb5e0aeaee0af8d-e0ae9ae0aeaae0aeb0e0aebfe0aeaee0aeb2e0af88-1.jpg?resize=514%2C960&ssl=1)
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை 26-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.இருப்பினும் நாளை வேறு பூஜைகள் எதுவும் நடை பெறாது. மறுநாள் 27-ந்தேதி காலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் பங்குனி உத்திர திருவிழாவுக்கான கொடி ஏற்றப்படுகிறது.
தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும். அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவடைகிறது.