கருட, நாக பஞ்சமி! சிறப்புகளும் வழிபாட்டின் பலன்களும்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

garuta panchami
  • கே.ஜி. ராமலிங்கம்

கரு’ என்பதற்கு சிறகு என்று பொருள். ‘ட’ என்றால் பறப்பது. சிறகுகளைக் கொண்டு பறப்பதாலேயே….அவர் கருடன். அனைத்து பறவைகளும் அப்படித் தானே பறக்கின்றன. ஆம். ஆனால்…. கருடனுக்கு மட்டும் இந்த பெயர் அமையக் காரணம்….கருடன் தன் சிறகுகளைக் கொண்டு… நினைக்கவும் இயலாத அதிவேகத்தில் பறக்கும் திறனைப் பெற்றிருப்பதால்.

அதாவது….ஒருமணி நேரத்தில் 125 முதல் 200 மைல்கள் வரை வேகமாக பறக்கும் திறமை கொண்டவர் கருடன்.

மேலும் அவரின் பார்வை மிகவும் கூர்மையானது. எவ்வளவு கூர்மை என்றால் ஒரு 10 அடுக்கு மாடி கட்டிடத்தின் உச்சியில் அமர்ந்திருக்கும் கருடனால் நிலத்தில் ஊர்ந்து செல்லும் எறும்பை பார்க்க முடியும். மேலும் கருடனால்….340 டிகிரி வரை கண்களை சுழற்றி பார்க்க முடியும் . அதாவது அவரின் தலைக்கு நேர் பின்னால் இருப்பவற்றை மட்டுமே அவரால் பார்க்க முடியாது .

கருடனை வழிபடுவதால் ஏற்படும் முக்கிய பலன்களில் ஒன்றாக கண் குறைபாடுகள் நீங்குதல் கூறப்பட்டு இருக்கிறது. கருடனின் பார்வை சிறப்பை அறிகையில் அதில் வியப்பேதுமில்லை.
அதே பார்வை குறைபாட்டை நீக்க யோகாசனங்களில்….கருடாசனமும்……யோக முத்திரைகளில் கருட முத்திரையும் பெயர் பெற்றவை.

கருட முத்திரை என்றதும் குறிப்பிடப்பட வேண்டியது…..அது ரகுகுலத்தின் முத்திரை என்பது.

வென்றி வேந்தரை வருக என்று உவணம் வீற்றிருந்த
பொன் திணிந்த தோட்டு அரும்பெறல் இலச்சினைபோக்கி
நன்று சித்திர நளிர் முடி கவித்தற்கு நல்லோய்
சென்று வேண்டுவ வரன்முறை அமைக்க எனச்செப்ப
–அயோத்தியா காண்டம்

இங்கு…. உவணம் என்பது கருடனைக் குறிக்கும். இதிலிருந்து… ரகுகுலத்தின் முத்திரை…. கருட முத்திரை என்பதை அறியலாம்.

பெருமாளின் வாகனமாகவும், கொடியாகவும் விளங்கும் கருடனுக்கு உகந்த விரதம் ஆடி மாதம் வளர்பிறை பஞ்சமியன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.

கருட பஞ்சமியன்று கருட வழிபாடும், விஷ்ணு வழிபாடும் கனிந்த வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும். கருடனை போல பலசாலியும் புத்திமானாகவும், வீரனாகவும் மைந்தர்கள் அமைய அன்னையர்கள் கருட பஞ்சமியன்று விரதம் இருக்கின்றனர்.

அன்று ஆதிசேஷன் விக்கிரகம் வைத்து சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். இது என்ன கருட பஞ்சமி திதியில் ஆதிசேஷனுக்கு பூஜையா என்று வியக்கின்றீர்களா? வினதையின் மைந்தன் கருடனின் மாற்றாந்தாய் கத்ருவின் மைந்தர்கள் தானே நாகங்கள் அவர்கள் செய்த சூழ்ச்சியினால் தானே வினதை அடிமையாக நேர்ந்தது அன்னையின் அடிமைத்தளையை களைய கருடன் தேவலோகம் சென்று அமிர்தம் கொண்டு வர நேர்ந்தது அப்போதுதான் பெருமாளுடன் கருடன் போரிடும் வாய்ப்பும் வந்தது பின் பெரிய திருவடியாக எப்போதும் பெருமாளை தாங்கும் பாக்கியமும் கிட்டியது எனவே கருட பஞ்சமியன்று ஆதி சேஷன் விக்கிரகம் வைத்து பூஜை செய்யப் படுவதாக ஐதீகம். மேலும் கருடனின் உடலில் எட்டு ஆபரணமாக விளங்குபவை அஷ்ட நாகங்களே.

அன்றைய தினம் நோன்பிருந்து கவுரி அம்மனை நாகவடிவில் ஆராதிக்க வேண்டும். அன்று வடை, பாயசம், எண்ணெய் கொழுக்கட்டையோ அல்லது பால் கொழுக்கட்டையோ செய்து நாகருக்கு பூஜைசெய்து, தேங்காய் உடைத்து வைத்து, பழம், வெற்றிலை, பாக்குடன் நைவேத்யம் செய்ய வேண்டும்.

இந்த பூஜை முடிந்ததும் சரடு கட்டிக் கொள்ள வேண்டும். சரடுகளில் 10 முடி போட்டு, பூஜை செய்யும் இடத்தில் அம்மனுக்கு வலது பக்கம் வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது அம்மனுக்கு ஒரு சரடு மட்டும் சாற்ற வேண்டும். பூஜை முடிந்த பிறகு அனைவரும் வலது கையில் சரடு கட்டிக் கொள்ளலாம்.

அருகில் பாம்பு புற்று இருந்தால் சிறிது, பால், பழம், கொழுக்கட்டை எடுத்துக் கொண்டு போய், புற்றில் பால்விட்டு, பழம், கொழுக்கட்டை வைத்து விட்டு வரலாம். அருகில் புற்று ஏதும் இல்லா விடில் வீட்டில் பூஜையில் வைத்திருக்கும் நாகத்தின் மேலேயே சிறிது பால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

இந்த நோன்பு கூடப்பிறந்த சகோதரர்கள் நலத்தையும் வளத்தையும் கோரும் நோன்பாகும். ஆதலால் அவர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு பணமோ அல்லது துணிகளோ வைத்து, தாம்பூலம் கொடுத்து, பெரியவர்களாக இருந்தால் நமஸ்கரித்து ஆசி பெறலாம். சிறியவர்களாக இருந்தால் ஆசீர்வாதம் செய்யலாம்.

கருடாழ்வாரை வணங்குவோம்: இவரை வணங்கினால் சகலவிதமான நன்மைகள் கண் பார்வை குறைபாடுகள் அகலும், பகையும் பிணியும் நீங்கும். செல்வம் செழிக்கும். பெருமாளை கருட வாகனத்தில் சேவித்தவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்பது காலம் காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆகாயத்தில் கருடனைப் பார்ப்பதும் அவருடைய குரலைக் கேட்பதும் நல்ல சகுனம்.

பிறரை வசியம் செய்வது, மயங்க வைப்பது, பகைவர்களை அடக்குவது, அந்தரத்தில் உலவுதல், நெருப்பிடையே பயம் இல்லாமல் புகுந்து செல்வது, இந்திர ஜாலம் காட்டுவது, படிப்பில் நல்ல தேர்ச்சி, நினைவாற்றல், தேர்வில் வெற்றி ஆகியவற்றை கருடாழ்வாரை மனம் கனிந்து வழிபடுவதன் மூலமாக பெறமுடியும் என்பதை பத்ம புராணம் கூறுகிறது.

எம்பெருமான் பள்ளிகொள்ளும் ஆதி சேஷனையும், அவரைத் தாங்கிசெல்லும் வாகனமாகிய கருடாழ்வாரையும் சிந்தித்து நல்ல வாழ்வு பெறுவோம்.



Leave a Reply