நவராத்திரி திருவிழா; முப்புடாதி அம்மன் திருவீதி உலா!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

senkottai muppudathi amman

செங்கோட்டையில் நவராத்திரி திருவிழா முப்புடாதி அம்மன் திருவீதி உலா.

செங்கோட்டை ஆரியநல்லுார் தெரு யாதவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீமுப்புடாதி அம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இந்தாண்டு நவராத்திரி திருவிழா கடந்த அக்டோபா் மாதம் 03ஆம் தேதி துவங்கியது விழாவில் 4ஆம் தேதி மாபெரும் திருவிளக்கு வழிபாடு நடத்தப்பட்டது. அதனைதொடா்ந்து நாள்தோறும் முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

10ஆம் திருநாளான நேற்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட மலர் சப்பரத்தில் வாணவேடிக்கை மேளதாளம் முழங்கிட கோவில் முன்பிலிருந்து துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

விழா ஏற்பாடுகளை விழாக்கமிட்டியினா், சமுதாய பெரியோர்கள், நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினா்கள், இளைஞரணி நிர்வாகிகள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனா்.

author avatar

Leave a Reply