சபரிமலை மண்டல மகரவிளக்கு சீஸன்; நவ.15ல் நடை திறப்பு!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

sabarimala iyappan sannidhi opened

வரும் நவ 16ல் துவங்கும் சபரிமலை மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (நவம்பர்) 15-ந் தேதி திறக்கப்படுகிறது.

இந்த ஆண்டு சீசன் தொடக்கம் முதலே தினசரி 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மண்டல, மகர விளக்கு சீசனின் போது சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் கட்டுகடங்காமல் இருந்தது. இதில் பாதுகாப்பு குளறுபடியும் இருந்ததாக அரசின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் உடனடி தரிசன முன்பதிவும் ஒரு பிரச்சினையாக கூறப்பட்டது.

எனவே இந்த வருடம் உடனடி தரிசன முன்பதிவை ரத்து செய்து விட்டு ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் மட்டும் தினசரி 80 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கப்படும் என சமீபத்தில் நடந்த முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான உயர் மட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அரசின் இந்த முடிவுக்கு பந்தளம் ராஜ குடும்பம் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும் வழக்கம் போல் உடனடி முன்பதிவு தரிசனத்தை அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கிடையே திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் தேவஸ்தான அலுவலகத்தில் தலைவர் பிரசாந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் உடனடி தரிசன முன்பதிவு முறையை மீண்டும் கொண்டு வருவதற்காக அரசின் அனுமதியை பெற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆண்டு சீசன் தொடக்கம் முதலே தினசரி 18 மணி நேரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் தெரிவித்தார்.

இது தேவஸ்தானத்தின் முடிவு என்ற போதிலும் சபரிமலை கோவில் விவகாரத்தில் தந்திரியின் அனுமதிக்கு பின்னரே அனைத்து முடிவுகளும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இதன் படி வரும் மண்டல-மகரவிளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை தரிசன நேரம் மறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் யாத்திரை காலத்திற்கு முன்னதாக சபரிமலையில் திருத்தப்பட்ட தரிசன நேரம். புதிய கால அட்டவணையின்படி, காலை 3 மணி முதல் 1 மணி வரையும், மீண்டும் 3 மணி முதல் 11 மணி வரையும் பக்தர்களை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு நாளும் 17 மணி நேரத்திற்கு வழிபாட்டுக்கு வாய்ப்பு அளிக்கிறது.

விருச்சிகம் கார்த்திகை நாள்-1 (நவம்பர்-17) தொடங்கி சபரிமலை சீசன் முழுவதும் புதிய நேரம் செயல்படுத்தப்படும். வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேவஸ்வக் வாரிய கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

திருத்தப்பட்ட நேரங்களுடன் கூடுதலாக, விர்ச்சுவல் வரிசையில் முன்பதிவு செய்பவர்களுக்கு 48 மணி நேர அருள் காலம் வழங்கப்படும்.

ஆன்லைனில் பதிவு செய்யாத பக்தர்களுக்கு தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்படும் என தேவஸ்வம் வாரியம் அறிவித்துள்ளது.இதனால் சபரிமலையில் கூடுதல் கூட்டம் தரிசனம் குளறுபடி இருக்கும்

author avatar
Media News Reporter, Rajapalayam

Leave a Reply