ஜெனக நாராயண பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

IMG 20240415 WA00121

சோழவந்தான் ஜெனகநாராயணபெருமாள் கோவில் பங்குனி திருவிழா 7ம் நாள் திருவிழாவாக திருக்கல்யாண வைபவம் நடந்தது.

இவ்விழாவை முன்னிட்டு வடக்கு ரதவீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும்பெண்கள் சீர்வரிசை எடுத்து பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் நான்குரதவீதியில் வலம் வந்து கோவில் மண்டபத்திற்கு வந்து சேர்ந்தனர்.
இதைத் தொடர்ந்து மாப்பிள்ளை, பெண் அழைப்பு, மாலை மாற்றும் வைபவம் ,ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் அர்ச்சகர் சாரதி மற்றும் பட்டர்கள் யாகவேள்விநடத்தினர்

இதைத் தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது திருமாங்கல்யம் மற்றும் பிரசாதம் உள்ள தாம்பூலப்பை மற்றும் அன்னதானம் வந்திருந்த பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.இரவு வண்ண கோரதத்தில் திருமணக் கோலத்தில் மின் அலங்காரத்தில் பவனி வருவார்.

திருக்கல்யாண நிகழ்ச்சியில் சோழவந்தான் பேரூராட்சி தலைவர் எஸ் எஸ் கே ஜெயராமன் மாவட்ட திட்டக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் அறங்காவலர் குழு தலைவர் எஸ் எஸ் ராஜாங்கம் அறங்காவலர்கள் எம் எஸ் பாண்டியன் பெரியசாமி ஆண்டியப்பன் மங்கையர்க்கரசி செயல் அலுவலர் சுதா கோவில் பணியாளர் முரளிதரன் உபயதாரர் சௌந்தரிஅம்மாள், லலிதாசங்கரன், உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply