இந்தக் கோயிலில், கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தினரும், சென்னை இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் உழவாரப் பணி மன்ற சிவனடியார்களும் இணைந்து கோயில் பிராகாரங்கள், நுழைவு வாயில், மண்டபம், விமானங்களில் செடி கொடிகள், முள்செடிகள் ஆகியவற்றை உழவாரப் பணியின் போது சுத்தம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கும்பகோணம் ஜோதிமலை இறைபணி திருக்கூட்டத்தினர் செய்திருந்தனர்.
