மதுரை கோயில்களில் நவராத்திரி விழா தொடக்கம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

navarathri in madurai temples

மதுரை கோயிலில் நவராத்திரி விழா:

மதுரையில் உள்ள கோயில்களில், நவராத்திரி முன்னிட்டு அம்மன் பல்வேறு அலங்கரி அலங்காரத்தில் பக்தருக்கு காட்சி அளித்தார்.
மதுரையில் மீனாட்சி சுந்தரர் கோவில், இம்மையில் நன்மை தருவார் திருக்கோவில், பழைய சொக்கநாதர் கோவில், தெப்பக்குளம் மாரியம்மன் திருக்கோவில், அருள்மிகு முக்தீஸ்வரர், அண்ணா நகர் சர்வேஸ் ஆலயம், வைகை விநாயகர் ஆலயம், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் ஆலயம், வர சக்தி விநாயகர் ஆலயம், மதுரை மேலமடை சௌபாக்கி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட கோயில்களில் நவராத்திரி முன்னிட்டு அம்மன் மீனாட்சி மற்றும் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்தார். முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதேபோல், சோழவந்தான் ஜனகை மாரியம்மன், ஜஎனகஐ நாராயணப் பெருமாள், திரௌபதியம்மன், பிரளயநாத சிவன் ஆலயம், தென்கரை மூலநாதர் திருவேடகம் ஏடகநாதர், துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயங்களில் நவராத்ரி விழாவையொட்டி, அம்மன் அலங்காரத்தில் காட்சி அளித்தார்.

மதுரை அவனியாபுரத்தில் உள்ள கல்யாண சுந்தரேஸ்வரர் பால மீனாம்பிகை திருக்கோவிலில் நவராத்திரி கொலு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் கல்யாண சுந்தரேஸ்வரர் பாலமீனாம்பிகை திருக்கோவில் உள்ளது. மதுரையை தலைநகராக ஆட்சி புரிந்த பாண்டிய மன்னர்களின் ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில். இங்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி கொலு விழா நடைபெறுவது வழக்கம் .

இந்த ஆண்டு நவராத்திரி கொலுவிழாவின் முதல் நாளான இன்று அம்பாளுக்கு ராஜராஜேஸ்வரி அலங்காரம் செய்து கொலு நடைபெற்றறது. விழாவில், லலிதா சஹஸ்ரநாமம் மற்றும் பக்தர்களின் பாடல்களுடன் சிறப்பாக பூஜையுடன் கொலு விழா நடைபெற்றது.

திருக்கோவில் செயல் அலுவலர் சங்கரேஸ்வரி மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply