சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் ஆனி சனி மகாபிரதோஷ விழா!

செய்திகள்
– Advertisement –


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!

சோழவந்தான் பிரளய நாத சிவன் கோவிலில் ஆனி மாத சனி மகா பிரதோஷ விழா

மதுரை மாவட்டம்சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் ஆனி மாத சனி மகாபிரதோஷ விழா நடந்தது.பிரசித்தி பெற்ற சோழவந்தான் வைகை கரையில் அமைந்துள்ளபிரளயநாத(சிவன்)கோவிலில்ரன ஆனி மாத சனி மகாபிரதோஷ விழா நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 11அபிஷேகங்கள் நடைபெற்று, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர்.சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.

எம்விஎம் குழுமத்தலைவர் மணிமுத்தையா,கவுன்சிலர்கள் வள்ளிமயில், டாக்டர் மருதுபாண்டியன்,தக்கார் இளமதி மற்றும் கோவில் பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர் சிவ பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் சனிபிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி,அம்பாள் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர்.பூஜைகள் நடந்தது



Leave a Reply