பெருமாள் திருமொழி

குலசேகராழ்வார்

ஸ்ரீ:

 

குலசேகரப்பெருமாள் அருளிச்செய்த

 

 

பெருமாள் திருமொழி

 

ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:

பெருமாள் திருமொழி தனியன்கள்

உடையவர் அருளிச் செய்தது

 

நேரிசை வெண்பா

 

இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்
குலசே கரனென்றே கூறு


மணக்கால் நம்பி அருளியது
கட்டளைக் கலித்துறை

 

ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே

 

குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்

 

Leave a Reply