108 திவ்ய தேசங்களின் விவரங்கள்
எங்கும் அந்தர்யாமியாகத் திகழும் ஸ்ரீமந் நாராயணனின் அர்ச்சாவதாரத் திருக்கோலத்தை நாம் தரிசிக்க ஏதுவாக, இந்த மண்ணுலகிலே நம் பெரியோர்களால் ஏற்படுத்தி வைக்கப்பட்ட திவ்விய தேசத் தலங்களின் தரிசனம்…
ஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமைப் பீடமாகக் கருதப்படும் ஸ்ரீரங்கம் திருக்கோவில் பெரிய கோவில் என்று போற்றப்படுகிறது. அனைத்து ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பெற்ற பெருமை கொண்டது. ஸ்ரீரங்கநாதன் அருள் அனைவருக்கும் கிட்டுவதாக!