அமாவாசை / மாசப் பிறப்பு – பித்ரு தர்ப்பணம் – மந்திரங்கள் மற்றும் செய்முறை!

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

சோபக்ருத் – ஆடி மாச பிறப்பு தர்ப்பணம் 

ஆடி 1, திங்கட்கிழமை, 17.07.2023

Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!

காலையில் தீர்த்தமாடி, நித்ய-கர்மானுஷ்டானங்களைச் செய்யவும். கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு, ஆசமனம் செய்யவும்.  அத்துடன் 3 தர்ப்பங்களை இடுக்கிக் கொள்ளவும். 3 தர்ப்பங்களை ஆஸநமாகப் (காலின் கீழ்) போட்டுக் கொள்ளவும்.

ப்ராணாயாமம் செய்யவும். (கையைக் கூப்பிக் கொண்டு)

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப ஸாந்தயே||
யஸ்யத்விரத வக்ராத்யா: பாரிஷத்யா: பரச்சதம் 
விக்னம் நிக்னந்தி ஸததம் விஷ்வக்ஸேனம் தமாச்ரயே ||

ஸங்கல்பம்

(வலது முழங்கால் மீது, இடது உள்ளங்கை மேல் வலது உள்ளங்கையை சேர்த்துக் கொண்டு) – {ப்ராசீனாவீதம்) – யக்ஞோபவீதத்தை – பூணூலை இடதுபுறம் போட்டுக் கொள்ளவும்

ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த 
அஸ்ய ஸ்ரீபகவத: மஹாபுருஷஸ்யா விஷ்ணோராஜ்(க்)ஞயா ப்ரவர்த்தமானஸ்ய ஆத்ய பிரம்மண: த்விதீய பராத்தே ஸ்ரீ ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வதரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரதவர்ஷே பரத கண்டே சகாப்தே மேரோ: தக்ஷிணே பார்ச்வே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம், மத்யே


ஸோபக்ருத் நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே, க்ரீஷ்ம ருதௌ, மிதுன மாஸே, க்ருஷ்ண பக்ஷே, அமாவாச்யாம் -புண்யதிதௌ, வாஸர: வாஸரஸ்து இந்து வாஸரயுக்தாயாம். – புனர்வசு நக்ஷத்ரயுக்தாயாம் –


ஸ்ரீவிஷ்ணுயோக ஸ்ரீவிஷ்ணுகரண சுபயோக சுபகரண ஏவங்குண விசேஷேண விசிஷ்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயம் அமாவாச்யாம் புண்யதிதௌ – ஸ்ரீபகவதாஜ்ஞா பகவத் கைங்கர்யம் -.

(பித்ரு வர்க்கம்) ……………………. கோத்ராணாம் ……………… ஸர்மாணாம் – அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் | மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம்

(மாதாமஹ வர்க்கம்) …………….. கோத்ராணாம் ……………….. ஸர்மாணாம் – அஸ்மத் மாது: பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் | மாதாமஹீ மாது:-பிதாமஹீ மாது:- ப்ரபிதாமஹீனாம் உபய வம்ச பித்ரூணாம் அக்ஷய்ய த்ருப்யர்த்தம்

கடக ஸங்க்ரமண புண்யகாலே கடக ஸங்க்ரமண ச்ராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே/

(இடுக்குப் புல்லை தென்புறம் போட்டு விடவும்)

** பித்ருவர்க்க ஆவாஹனம்

(3 தர்ப்பங்களாலான ஒரு புக்னத்தை கிழக்கு பக்கம் தெற்கு நுனியாக சேர்த்து)

ஆயாத பிதர: ஸோம்யா கம்பிரை: பதிபி: பூர்வை  ப்ரஜாமஸ்மப்யம் தததோரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச
அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி

– என்று எள்ளை எடுத்துக் கொண்டு மேற்படி புக்னத்தில் முதலில் பித்ரு வர்க்கத்தை ஆவாஹனம் செய்யவும்.

பிறகு புக்னம் ஒன்றை எடுத்துக் கொண்டு,

ஸக்ருதாச்சிந்நம் பர்ஹிரூர்ணம் ம்ருதுஸ்யோநம்-  பித்ருப்யஸ்த்வா பராம்யஹம்-அஸ்மிந்ஸீதந்து மே பிதர ஸோம்யா-பிதாமஹா: ப்ரபிதாமஹாச்ச அநுகைஸ் ஸஹ ……………………. கோத்ராந் ………………….  சர்மண:
(3 பெயர்களை சொல்லி)

அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் 

— என்று ஆவாஹனம் செய்த புக்னத்தோடு வைக்கவும்,

அதன் மேல் இதம் அர்ச்சனம் என்று எள்ளைச் சேர்க்கவும். 

எள்ளுடன் கூடிய ஜலத்தை எடுத்துக் கொண்டு, 

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ரூந் 

– – என்று வலது பக்கம் சாய்ந்து கட்டை விரல் ஆள்காட்டி விரல் மத்யத்தால் (பித்ரு தீர்த்தத்தால்) புக்னங்களின் மேல் விடவும்)

** மாதாமஹவர்க்க ஆவாஹனம்

(3 தர்ப்பங்களாலான ஒரு புக்னத்தை மேற்கே பக்கம் தெற்கு நுனியாக சேர்த்து) 

ஆயாத மாது: பிதர: ஸோம்யா கம்பிரை: பதிபி: பூர்வை ப்ரஜாமஸ்மப்யம் தததோரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச

………….. கோத்ராந்  …………………………  சர்மண: (3 பெயர்களை சொல்லி)

அஸ்மத் மாதாமஹ: மாதுபிதாமஹ: மாது: ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி

–  என்று எள்ளை எடுத்துக் கொண்டு மேற்படி புக்னத்தில் முதலில் மாத்ரு வர்க்கத்தை ஆவாஹனம் செய்யவும்.

பிறகு புக்னம் ஒன்றை எடுத்துக் கொண்டு

ஸக்ருதாச்சிந்நம் பர்ஹிரூர்ணா ம்ருதுஸ்யோநம்-பித்ருப்யஸ்த்வா பராம்யஹம்- அஸ்மிந்ஸீதந்து மே பிதர ஸோம்யா-பிதாமஹா: ப்ரபிதாமஹாச்ச அனுகைஸ் ஸஹ 

இதமாஸனம் – என்று ஆவாஹனம் செய்த புக்னத்தோடு வைக்கவும், 

அதன் மேல் ’ இதம் அர்ச்சனம்’ என்று எள்ளைச் சேர்க்கவும். 

எள்ளுடன் கூடிய ஜலத்தை எடுத்துக் கொண்டு.

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே அஸ்மத் மாது:பித்ருந்

– என்று வலது பக்கம் சாய்ந்து கட்டை விரல் ஆள்காட்டி விரல் மத்யத்தால் (பித்ரு தீர்த்தத்தால்) புக்னங்களின் மேல் விடவும்

தர்ப்பணம்

பித்ருவர்க்கம் 

(கிழக்கிலுள்ள புக்னங்கள்) கீழுள்ள மந்திரங்களை சொல்லி தர்ப்பயாமி என்றவுடன் எள்ளும் ஜலமும் கட்டை விரல் ஆள்காட்டி விரல் மத்யத்தால் (பித்ரு தீர்த்தத்தால்) புக்னங்களின் மேல் விடவும்).

பித்ரு (தகப்பனார்)

1. உதீரதாம் அவர உத்பராஸ: உந்மத்யமா:பிதர ஸோம்யாஸ: அஸூம்ய ஈயூ: அவ்ருகா ருதஜ்ஞா தேநோ அவந்து பிதரோஹூவேஷூ

……………..கோத்ராந் ………………….. சர்மண:

அஸ்மத் பித்ருன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

2. அங்கிரஸோ ந பிதரோ நவக்வா. அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸூமதௌ யஜ்ஞியாநாம் அபிபத்ரே ஸௌமநஸேஸ்யாம

………………….. கோத்ராந் ……………….. சர்மண:

அஸ்மத் பித்ருன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

3. ஆயந்து ந: பிதர: மநோஜவஸ: அக்நிஷ்வாத்தா: பதிபிர் தேவயானை: அப்மின் யக்ஞே ஸ்வதயா மதந்து அதிப்ருவந்து-தே அவந்த்-வாப்மாந்

………………..கோத்ராந் …………………………….. சர்மண:

அஸ்மத் பித்ருன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

பிதாமஹான் (பாட்டனார்)

1. ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய கீலாலம் பரிஸ்ருதம்  ஸ்வதாஸ்த தர்ப்பயத மே பித்ருந் 

………………………….கோத்ராந்  ……………….. சர்மண: 

அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

2. பித்ருப்பம ஸ்வதாவிப்ய ஸ்வதா நம: பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: அக்ஷந்பிதர:

……………………. கோத்ராந் …………….. சர்மண:

அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

3. யே சே ஹ பிதர: யே ச நே யாகும்ச்ச வித்மயாகும் உச ந ப்ரவித்ம, அக்னே தாந் வேத்த யதி தே ஜாதவேத: தயா ப்ரதத்தகும் ஸ்வதயாமதந்து 

……………………….. கோத்ராந் ……………….. சர்மண:

அஸ்மத் பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

ப்ரபிதாமஹான் (பாட்டனாருக்கு தகப்பனார்)

1. மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் ந ஸந்த்வோஷதீ:

………………………கோத்ராந் ………………………. சர்மண: 

அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

2. மதுநக்ன முதோசஸி மதுமக் பார்த்திவகும் ரஜ: மதுத்யை அஸ்து ந: பிதா

………………கோத்ராந் ………………………. சர்மண:

அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

3. மதுமாந் நோ வனஸ்பதிர் மதுமாஹும் அஸ்து ஸூர்ய:  மாத்வீர்காவோ பவந்து ந: 

…………….. …கோத்ராந் …………………சர்மண:

அஸ்மத் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி 

பித்ருவர்க்கம் (ஸ்திரீகள்)

1. மாத்ரு (தாயார்)

……………………… கோத்ராயா: ……………. நாம்நீ 

அஸ்மத் மாத்ரு: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்

2. பிதாமஹீ (தகப்பனாரின் தாயார்

…………………………. கோத்ராயா: ………………… .நாம்நீ:

அஸ்மத் பிதாமஹீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்)

3. ப்ரபிதாமஹீ (தகப்பனாருக்கு பாட்டி)

……………………….கோத்ராயா: …………………….நாம்நீ: 

அஸ்மன் ப்ரபிதாமஹீ: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்)

ஜ்ஞாதா ஜ்ஞாத பித்ரூந் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்)

ஜ்ஞாதா ஜ்ஞாத பித்ரு பத்னீ : ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்) 

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த – தர்ப்பயத மே பித்ரூந் 

(3 தடவை எள்ளும் ஜலமும் விட்டு) – 

திருப்யத திருப்யத திருப்யத –  என்று சொல்லவும்

மாதாமஹ வர்க்கம்

மேற்குப் புறம் புக்னங்களில் பித்ரு வர்க்கத்தில் செய்தது போல் தர்ப்பணம் செய்யவும்.

மாதாமஹர் (தாயாரின் தகப்பனார்)

1. உதீரதாம் அவர உத்பராஸ உந்மத்யமா: பிதர: ஸோம்யாஸூ அஸூம்ய ஈயூ: அவ்ருகா ருதஜ்ஞா; தேநோ அவந்து பிதரோஹவேஷூ 

…………………… கோத்ரான் ………………………… .சர்மண:

அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

2. அங்கிரஸோ ந பிதரோ நவக்வா, அதர்வாணோ ப்ருகவ: ஸோம்யாஸ: தேஷாம் வயம் ஸூமதௌ யஜ்ஞியாநாம் அபிபத்ரே ஸௌமநஸேஸ்யாம ………………….. கோத்ரான் ………………………. சர்மண:

அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

3. ஆயந்து ந: பிதர: மநோஜவஸ: அக்நிஷ்வாத்தா பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்து அதிப்குவந்துதே அவந்த வஸ்மாத்

………………………..கோத்ரான் …………………….. சர்மண:

அஸ்மத் மாதாமஹான் ஸ்வதா நமஸ்  தர்ப்பயாமி

மாது: பிதாமஹான் (தாயாரின் பாட்டனார்)

1. ஊர்ஜம் வஹந்தி: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்ப்பயத மே மாது; பித்ருந்

……………………. ..கோத்ரான் ………………………. சர்மண: 

அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

2. பித்ருப்ய: ஸ்வதாவிப்ய:  ஸ்வதா நம: பிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: எஸ்வதா நம:  ப்ரபிதாமஹேப்ய: ஸ்வதாவிப்ய: ஸ்வதா நம: அக்ஷந்பிதர.

………………….  கோத்ரான் ………………… .சர்மண:

அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

3. யே சே ஹ பிதர: யே ச நேஹ யாகும்ச்ச வித்மயாகும் உச ந ப்ரவித்ம, அக்னே தாந் வேத்த யதி தே ஜாதவேத: தயா ப்ரதத்தகும் ஸ்வதயாமதந்து …………………………. கோத்ரான் ………………….. சர்மண: 

அஸ்மத் மாது:பிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

மாது: ப்ரபிதாமஹான் (தாயாரின் தகப்பனாருக்கு பாட்டனார்)

1. மதுவாதா ருதாயதே மதுக்ஷரந்தி ஸிந்தவ: மாத்வீர் ந ஸந்த்வோஷதி: 

……………………….. கோத்ரான் …………………. சர்மண:

அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி

2. மதுநக்ந முதோஷஸி மதுமத் பார்த்திவகும்ரஜ: மதுத்யௌ அஸ்து ந: பிதா

……………………. கோத்ரான் ……………………… சர்மண:

அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி 

3. மதுமாந் நோ வனஸ்பதி: மதுமாகும் அஸ்து ஸூர்ய: மாத்வீர் காவோ பவந்து ந: 

…………………………….கோத்ரான் ……………………… .சர்மண:

அஸ்மத் மாது:ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி

மாத்ரு வர்க்கம் (ஸ்திரீகள்)

1. தாயாரின் தாயார்

…………………………… கோத்ராயா……………………. ..நாம்நீ: 

அஸ்மன் மாதாமஹீ: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்

2. மாது: பிதாமஹீ (தாயாரின் பாட்டி)

……………………………..கோத்ராயா: ………………….. நாம்நீ:

அஸ்மன் மாது: பிதாமஹீ: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்)

3. மாது: ப்ரபிதாமஹீ (தாயாரின் தகப்பனாருக்கு பாட்டி)

……………………………. .கோத்ராயா: ………………. ..நாம்நீ: 

அஸ்மன் மாது: ப்ரபிதாமஹீ: ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்)

ஜ்ஞாதா ஜ்ஞாத மாது: பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்) 

ஜ்ஞாதா ஜ்ஞாத மாது:பித்ரூ பத்னீ: ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி 

(3 தடவை எள்ளும் ஜலமும் சேர்க்கவும்)

ஊர்ஜம் வஹந்தீ: அம்ருதம் க்ருதம் பய: கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த – தர்ப்பயத மே மாது: பித்ருந் – 

(3 தடவை எள்ளும் ஜலமும் விட்டு) 

திருப்யத திருப்யத திருப்யத –  -என்று சொல்லவும்.

உபஸ்தானம்

எழுந்திருந்து கைகூப்பிக் கொண்டு

நமோ வ பிதரோ ரஸாய, 
நமோவ பிதர: சுஷ்மாய
நமோ வ பிதரோ ஜீவாய,
நமோ வ பிதரோ மன்யவே. 
நமோ வ பிதரோ கோராய.
நமோவ பிதர. ஸ்வதாயை, 
பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் 
லோகேஸ்த யுஷ்மாகுஸ் தே 
யே அஸ்மிந் லோகே மாம் தேநு || 
ஏதாஸ்மின் லோகேஸ்த பூயம் தேஷாம் 
வஸிஸ்டோ பூயாஸ்த 
யே அஸ்மின் லோகே 
அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்

— என்று சொல்லி உபவீதம் செய்து கொண்டு

3 தடவை புக்னங்களை ப்ரதக்ஷிணம் செய்யும் பொழுது

வாஜே வாஜே அவத வாஜிநோ: நோதநேஷு 
விப்ரா அம்ருதா ருதக்ஞா: 
அஸ்ய மத்ய பிபத மாதயத்வம்
த்ருப்யாத பிதிபிர் தேவயாநை; 
தேவதாப்ய: பித்ருப்யச்ச
மஹாயோகிப்ய ஏவச
நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை
நித்யமேவ நமோ நம:

– என்று சொல்லி, பிறகு ஸேவித்து அபிவாதனம் செய்ய வேண்டும் 

பூணூலை ப்ராசீனாவீதம் செய்து கொண்டு, எள்ளைக் கையில் எடுத்துக் கொண்டு…. 

ஆயாத பிதர:ஸோம்யா கம்பீரை:பதிபி: பூர்வ்யை: ப்ரஜாமஸ்மப்யம் தததோரமிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச 
அஸ்மாத் கூர்ச்சாத் ………………………..கோத்ராந் …………………………சர்மண: 

(3 பெயர்களை சொல்லி) 

அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான் யதா ஸூகம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி 

—என்று சொல்லி பித்ரு வர்க்க (கிழக்கு) புக்னங்களில் எள்ளை சேர்க்கவும்.

மீண்டும் எள்ளை எடுத்துக் கொண்டு

ஆயாத மாது: பிதர: ஸோம்யா கம்பீரை: பதிபி: பூர்வ்யை: ப்ரஜாமஸ்மப்யம் தததோரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச சதசாரதஞ்ச 

அஸ்மாத் கூர்ச்சாத்  …………………. ..கோத்ராந் ………………..சர்மண: 

(3 பெயர்களை சொல்லி) 

அஸ்மத் மாதாமஹ: மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹாநாம் யதா ஸூகம் யதாஸ்தானம் ப்ரதிஷ்டாபயாமி 

– என்று சொல்லி மாத்ரு வர்க்க (மேற்கு) புக்னங்களில் எள்ளை சேர்க்கவும்.

புக்னங்கள் எல்லாவற்றையும் அவிழ்த்து எள்ளுடன் வலது உள்ளங்கையில் வைத்துக் கொண்டு. 

யேஷாம் ந பிதா ந ப்ராதா ந பந்துர் நான்ய கோத்ரிண: 
தே த்ருப்தி மகிலாயாந்து மயா த்யக்தை: குசைஸ்திலை: 

— என்று தீர்த்தத்துடன் விடவும்.

உபவீதம் செய்து கொள்ளவும்.

பவித்ரத்தை காதில் வைத்துக் கொண்டு ஆசமனம் செய்து பவித்ரத்தை அவிழ்த்து விடவும். –

காயேனவாசா மனஸேந்த்ரியைர்வா
புத்யாத்மனாவா ப்ரக்ருதே: ஸ்வபாவாத்
கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை
ஸ்ரீமந் நாராயணாயேதி ஸமர்ப்பயாமி||


Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply