பதினெட்டு படியும், பகவத்கீதையும்…!

ஆன்மிக கட்டுரைகள்

00" height="171" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2021/05/e0aeaae0aea4e0aebfe0aea9e0af86e0ae9fe0af8de0ae9fe0af81-e0aeaae0ae9fe0aebfe0aeafe0af81e0aeaee0af8d-e0aeaae0ae95e0aeb5e0aea4e0af8d-1.jpg" class="attachment-medium size-medium wp-post-image" alt="ayappan" style="margin-bottom: 15px;" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2021/05/e0aeaae0aea4e0aebfe0aea9e0af86e0ae9fe0af8de0ae9fe0af81-e0aeaae0ae9fe0aebfe0aeafe0af81e0aeaee0af8d-e0aeaae0ae95e0aeb5e0aea4e0af8d.jpg 615w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/05/e0aeaae0aea4e0aebfe0aea9e0af86e0ae9fe0af8de0ae9fe0af81-e0aeaae0ae9fe0aebfe0aeafe0af81e0aeaee0af8d-e0aeaae0ae95e0aeb5e0aea4e0af8d-4.jpg 300w" sizes="(max-width: 300px) 100vw, 300px" title="பதினெட்டு படியும், பகவத்கீதையும்...! 9">
ayappan
ayappan

சபரி மலைக்கு ஐயப்பனை தரிசிக்க செல்லும் போது 18படிகளை தாண்டி செல்கிறார்கள். அந்த 18பதினெட்டுப் படிகளுக்கும் ஒவ்வொரு யோகம் உண்டு அவையாவன.

முதல் படி – விஷாத யோகம் :பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் பாவ புண்ணியங்களை நிர்ணயிக்கும் என்று ஒவ்வொருவரும் உணர வேண்டும். இறைவன் திருவருளால் முக்தி பெற வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம். இதுவே முதல்படி

இரண்டாம் படி – சாங்கிய யோகம்: பரமாத்மாவே என் குரு என உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது சாக்கிய யோகம்.

மூன்றாம் படி – கர்ம யோகம்: கர்மயோகம் உபதேசம் பெற்றால் மட்டும் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பாராமல் கடமையை செய்யும் பக்குவம் கர்ம யோகம்,

நான்காம் படி – ஞானகர்ம சன்னியாச யோகம்: பாவ- புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப் படாமல் எதன் மீதும் பற்றில்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது ஞானகர்ம சன்னியாச யோகம் ஆகும்.

ஐந்தாம் படி – சன்னியாச யோகம்: நான் உயர்ந்தவன் என்ற ஆணவம் இல்லாமல் தான தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

ஆறாம் படி – தியான யோகம்: கடவுளை அடைய புலனடக்கம் மிகவும் அவசியம். இந்த புலன்கள் எல்லாம் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக் கூடாது இதுவே ஆறாவது படி.

ஏழாம் படி – ஞான விஞ்ஞான யோகம்: இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம் தான். எல்லாமே இறைவன்தான் என உணர்வது பிரம்ம ஞானம்.

எட்டாம் படி – அட்சர பிரம்ம யோகம்: எந்த
நேரமும் இறைவனின் திருவடி நினைவுடன் இருப்பது. வேறு சிந்தனைகள் இன்றி இருப்பது எட்டாம் படி.

ஒன்பதாம் படி – ராஜவித்யாராஜகுஹ்ய யோகம்: கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை. சமூக தொண்டாற்றி ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி என்று உணர்வது இந்தப்படி.

Sabhari
Sabhari

பத்தாம் படி – விபூதி யோகம்: அழகு, அறிவு, ஆற்றல் போன்று எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாக பார்ப்பது பத்தாம் படி

பதினொன்றாம் படி – விஸ்வரூப தரிசன யோகம்: பார்க்கும் அனைத்திலும் இறைவன் குடிகொண்டுள்ளான் என்று பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது.

பன்னிரெண்டாம் படி – பக்தி யோகம்:
இன்பம்-துன்பம், விருப்பு-வெறுப்பு ஏழை–பணக்காரன், போன்ற அனைத்து வேறுபாடுகளையும் களைந்து அனைத்திலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதிமூன்றாம் படி – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்: எல்லா உயிர்களிலும் இறைவன் வீற்றிருந்து இறைவனே அவர்களை இயக்குகின்றான் என்பதை உணர்தல் பதிமூன்றாம் படி

பதினான்காம் படி- குணத்ரய விபாக யோகம்: யோகம், பிறப்பு, இறப்பு மூப்பு ஆகிய வற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம்படி

பதினைந்தாம் படி – புருஷோத்தம யோகம்: தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி – தெய்வாசுர விபாக ஸம்பத் யோகம்
இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் கொள்ளாமல் நடப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி – ச்ரத்தாத்ரய விபாக யோகம்: ’சர்வம் பிரம்மம்’ என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை அடைவது பதினேழாம் படி.

பதினெட்டாம் படி – மோட்ச சன்னியாச யோகம்: யாரிடமும் எந்த உயிர்களிடத்தும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி என்று அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் அடைக்கலம் அடைந்து, அவன் அருள் புரிவான் என்று அவனையே சரணடைவது பதினெட்டாம் படி

aiyappan sabarimala old
aiyappan sabarimala old

சத்தியம் நிறைந்த இந்த பத்தினெட்டுபடிகளை பக்தியோடு கடந்து வந்தால் நம் கண் எதிரே அருள் ஒளியாய் தரிசனம் தந்து அருள் புரிய காத்திருப்பான் ஐயன் ஐயப்பன்… என்பதே இந்த பதினெட்டாம் படி தத்துவம். சுவாமியே சரணம் ஐயப்பா !

பதினெட்டு படியும், பகவத்கீதையும்…! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply