பரன்குன்றம் வைகாசி விசாகம்; வசந்த உத்ஸவம் ஊஞ்சல் சேவை!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

thirupparankundram murugan emple vaikasi visakam

திருப்பரங்குன்றத்தில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு வசந்த உற்சவ விழா-சுப்ரமணியசாமி தெய்வானை வசந்த மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளினர்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வசந்த உற்சவ விழா வைகாசி விசாகத் திருவிழா கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் தொடங்கி வெகு விமர்சனம் நடைபெற்று வருகிறது.

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வசந்த உற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆண்டுக்கான கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கியது விழாவினை முன்னிட்டு, உற்சவர் சன்னதியில் சுப்ரமணிய சுவாமி தெய்வானை, சண்முகர் வள்ளி தெய்வானைக்கு பால் பன்னீர் இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடர்ந்து, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார் அங்கு வசந்த மண்டபத்தில் நீர் நிரப்பப்பட்ட தொட்டியில் பூக்கள் பரப்பப்பட்டு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் எழுந்தருளினார் .
அரை மணி நேரம் அங்கு சுவாமி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார் . இதேபோல ,வருகின்ற எட்டாம் தேதி வரை சுவாமி தினமும் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளிப்பார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வருகின்ற ஒன்பதாம் தேதி விசாகத்தன்று சண்முகர் வள்ளி தெய்வானைக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பக்தர்கள் பால்குடமாக கொண்டு வரும் பால் கொண்டு காலை முதல் மதியம் வரை தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் நடைபெறும். விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 10ஆம் தேதி மொட்டை அரசு திருவிழா நடைபெறும்.

விழாவினை ஒட்டி அதிகாலையில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி தியாகராஜர் பொறியியல் கல்லூரி அருகே உள்ள மொட்டை அரசு திடலில் எழுந்தருளுவார். காலை முதல் மாலை வரை அங்கு பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சுப்பிரமணிய சுவாமி இரவு பூ பல்லாக்கில் திருப்பரங்குன்றம் கோயிலை வந்து அடைவார். விழாவிற்கான ஏற்பாடுகளை,
கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

விசாகத் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் கூட்டம்

மதுரை, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் வைகாசி விசாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் – கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.

வரும் ஜூன் ஒன்பதாம் தேதி வைகாசி விசாகத்தை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம் கோவில் வளாகத்தில் உள்ள கந்தசஷ்டி மண்டபத்தில் நடைபெற்றது .
கூட்டத்திற்கு, திருமங்கலம் கோட்டாட்சியர் ஷாலினி தலைமை வைத்தார். கோவில் இணை ஆணையர் சூரிய நாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள், காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள் என்பதால் அவர்களுக்கான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதி,பாதுகாப்பு வசதி உள்ளிட்ட வசதிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.பக்தர்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள், தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.

வைகாசி விசாகத்தன்று பாதுகாப்புக்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அசம்பாவிதத்தை தடுக்கும் விதமாக தீயணைப்பு வாகனமும் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளது,வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் கிரிவலப் பாதை, நான்கு ரத வீதிகளில் போக்குவரத்திற்கு தடை விதித்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்ய உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கோவில் அறங்காவலர் குழுவினர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Leave a Reply