பிரதிஷ்டை விழா; சபரிமலை கோயில் நடை திறப்பு!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

sabarimala panguni uthiram

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று பிரதிஷ்டை தின பூஜை வழிபாடுகள் கோலாகலமாக துவங்கி நடைபெற்றது. ஐயப்பன் கோயில் நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி இன்று அதிகாலை திறந்து வைத்து பூஜை வழிபாடுகளை தொடங்கி வைத்தார்.

நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார். சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்கள் தவிர மாதாந்திர வழிபாட்டுக்காக ஒவ்வொரு மாதமும் திறக்கப்படுவது வழக்கம். இது தவிர சிறப்பு நாட்களிலும் நடை திறக்கப்படும்.

அதன்படி ஆண்டுதோறும் பிரதிஷ்டை தினத்தையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான பிரதிஷ்டை தினம் இன்று வருகிறது.

இதற்காக சபரிமலை கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. இந்த நடையை மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி திறந்து வைத்தார். இன்று அதிகாலையில் பிரதிஷ்டை தின சிறப்பு பூஜை தொடங்கியது.
இதனைth தொடர்ந்து நடைபெறும் வழிபாடுகளுக்கு பிறகு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆனி மாத பூஜைக்காக வருகிற 14-ந் தேதி மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். 15-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

சபரிமலை ஐயப்பன் கோவில் மூல விக்ரகம் ஐயப்பன் சிலை தீ சேதம் ஏற்பட்டது.தற்போதைய சிலை பல ஆண்டுகள் முன்பு வைகாசி மாதம் ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நாளில் வருடம்தோறும் பிரதிஷ்டை தின பூஜைகள் சபரிமலை ஐயப்பனுக்கு நடத்தப் படுகிறது.

பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.



Leave a Reply