682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜைகள் நாளை தொடங்குகின்றன. இதை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை இன்று பிப்12 மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரூ ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்தார். இன்று வேறு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
நாளை அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கும். இரவில் படி பூஜையும் நடைபெறும். வரும் 17ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
கேரளா வனப்பகுதியில் தற்போது கடும் வெயில் வாட்டில் எடுத்து வரும் நிலையே பம்பை சபரிமலையில் வெயில் மிக அதிக அளவில் இருந்தது இதனால் சபரிமலை வரும் பக்தர்கள் வாகனங்களை தொடர்ந்து பம்பையில் நிறுத்தவும் பம்பையில் நீராடவும் குடிநீர் வசதி மருத்துவ வசதி உட்பட மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவர்சம்போடு செய்து கொடுத்துள்ளது மேலும் பக்தர்களுக்கு ஐந்து நாட்களிலும் அன்னதானம் வழங்கப்படும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சபரிமலை பம்பை பகுதியில் நிலவும் தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண குள்ளார் அணைகுல்லார் அணைஇன்று (12) திறக்கப்பட்டது.இதனால் பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.
பத்தனம்திட்டா – சபரிமலை கும்பமாச பூஜையின் ஒரு பகுதியாக பம்பாவில் போதுமான நீர் மட்டத்தை உறுதி செய்வதற்காக, கக்காடு சீதாத்தோடில் உள்ள கே.எஸ்.இ.பி (அணை பாதுகாப்பு பிரிவு) நிர்வாகப் பொறியாளருக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத் தலைவர் எஸ். பிரேம்கிருஷ்ணன் அனுமதி அளித்துள்ளார்.
பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.