மதுரை சீனிவாச பெருமாள் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை

செய்திகள்

ரவிச்சந்திரன், மதுரை

40 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோயிலில் உலக நன்மை வேண்டி 108 விளக்கு பூஜை வழிபாடு.

மதுரை மாவட்டம், திருநகர் அருகே 40 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி , பூதேவி சமேத திருக்கோவிலில், உலக நன்மை வேண்டியும், பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தை ஒட்டியும், 108 விளக்கு பூஜை வழிபாடு நடைபெற்றது.

இந்த விளக்கு பூஜையில், குழந்தை வரம் வேண்டியும், மாங்கல்யம் நிலைக்கவும், திருமண பாக்கியம் வேண்டியும், கல்வி, செல்வம் , சிறந்த வேலை வாய்ப்பு வேண்டியும் பெண் பக்தர்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

தொடர்ந்து , 2 மணி நேரமாக நடைபெற்று வந்த , இவ்விளக்கு பூஜையில் சரஸ்வதி , லட்சுமி, துர்க்கை மற்றும் சுவாமிகளின் மந்திரங்கள் முழங்கியவாறு பெண் பக்தர்கள் விளக்கு பூஜையில் வழிபட்டனர்.

Leave a Reply