ஆவுடையார்கோயில் மார்கழி திருவாதிரை விழா; மாணிக்கவாசகர் வீதிஉலா!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

avudaiyarkoil thiruvembavai vizha

ஆவுடையார்கோயில்: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரை முதல்நாள் திருவிழாவில் மாணிக்கவாசகர் வீதி உலாவில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஆவுடையார்கோயிலில் உலக பிரசித்தி பெற்ற ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது இக்கோயில் பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட கோயிலாகும் திருவாசகம் பிறந்த திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோயிலில் மார்கழி திருவாதிரை திருவிழா நடந்து வருகிறது
முதல்நாள் விழாவை முன்னிட்டு திருவாவடுதுறை 24வது குருமகாசன்னிதானம் அம்பலவாண தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் அருள் ஆணைப்படி திருவாவடுதுறை கட்டளை தம்பிரான் வேலப்பதேசிகர் முன்னிலையில் கோயிலில் உள்ள ஆத்மநாதர் யோகாம்பிகா உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்த நிலையில் மாணிக்கவாசகருக்கு சிறப்பு தீப ஆராதனை செய்து மேளதாளம் முழங்க வீதி உலா நடந்தது.வீதி உலாவில் பக்தர்கள் வீடுதோறும் அர்ச்சனை செய்து வழிபட்டனர்

வான வேடிக்கைகளுடன் மாணிக்கவாசகர் வெள்ளிசிவிகை வாகனத்தில் அரிமர்த்தனபாண்டியனாக காட்சி கொடுத்தார்.விழா மண்டகப்படி நெல்வேலி நவக்குடி பிள்ளைமார் வகையறா மற்றும் திருக்கோயில் சார்பில் நடந்தது.

அபிஷேக அரச்சனைகளை ஆத்மநாதருக்கு நம்பியார்களும் மாணிக்கவாசகருக்கு சிவாச்சாரியார்களும் செய்தனர்.வேதமந்திரங்கள் வேதபாராயணம் அத்தியானபட்டர் முன்னிலையில் நடந்தது.விழா ஏற்பாடுகளை தென்டலமேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன், கண்காணிப்பாளர் சுப்ரமணியன் மணியம் ராமன் ஆகியோர் செய்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆவுடையார்கோயில் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி செய்தார்.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply