செங்கோட்டையில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
3">
– Advertisement –

தென்காசி மாவட்டம் செங்கோட்டையில், கந்தசஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார விழா நடைபெற்றது. 

செங்கோட்டை அருள்மிகு அறம்வளர்த்த நாயகி சமேத குலசேகரநாத ஸ்வாமி திருக்கோயிலில் வருடந்தோறும் கந்த சஷ்டியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதுபோல், இந்த ஆண்டும் கந்த சஷ்டித் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. நவம்பர் 18ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்குத் தொடங்கி முருகப்பெருமான் திரளான பக்தர்கள் உடன்வர ரதவீதிகளில் வலம் வந்தார்.

பெருமாள் சந்நிதித் தெரு முனையில் ரத வீதியில் பக்தர்கள் பெருமளவு திரண்டிருக்க, முருகப் பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் காட்சி நடந்தேறியது.

பக்தர்கள் அரோஹரா கோஷத்துடன் முருகப் பெருமானை தரிசித்து, அருள் பெற்றார்கள். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.

Leave a Reply