நம்ம ஊரு சுற்றுலா: பஞ்சவடி பிரமாண்ட ஆஞ்சநேயர்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

panchavati

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

பகுதி 7 – பஞ்சவடி

மயிலம் முருகன் கோயிலுக்குப் பக்கத்திலேயே திருவக்கரை வக்ரகாளியம்மன், பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆகிய கோயில்கள் இருப்பதால் இவற்றையும் நாம் தரிசிக்கலாம். அன்று சனிக்கிழமை எனவே பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயரை நாம் தரிசிக்க முடியும் என்பதால் நாங்கள் எங்கள் காரை பஞ்சவடி நோக்கி செலுத்தினோம். சுமார் 1245 மணிக்கு நாங்கள் பஞ்சவடி வந்து சேர்ந்தோம். மயிலத்திலிருந்து பஞ்சவடி செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. முதல் பாதை மாநில நெடுஞ்சாலை 132 வழி. இரண்டாவது சிறிது தூரம் மாநில நெடுஞ்சாலையில் சென்று விட்டு, மீண்டும் தேசிய நெடுஞ்சாலை 32 வழியாகச் செல்வது. இரண்டாவது வழிதான் அருமையான வழி. புதுச்சேரிக்குள் நுழைய லைசன்ஸ் போட வேண்டும். லைசன்ஸ் போட்ட பின்னர் பஞ்சவடி கோயிலுக்குச் செல்லலாம்.

          பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில் இருக்கும் இடம் விழுப்புரம் மாவட்டம், பஞ்சவடி என்னும் சிற்றூர். இங்கே ஆஞ்சநேயரின் பெயர் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகும்.        ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதுபற்றிய விபரம் ரமணி அண்ணா என்பவர் பார்த்த தேவபிரசன்னத்தில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட்டது.

          ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகம் ஏன் என்பதற்கும் காரணம் உண்டு. இராமனுக்கும், இராவணனுக்கும் போர் நடந்த போது, இராவணன் ஆயுதங்களை இழந்தான். இதனால் இராமர் அவனை

‘ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த

பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு

நாளை வா’ என நல்கினன்–நாகு இளங் கமுகின்

வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

(கம்பராமாயணம், யுத்த காண்டம்)

          என்று அவனை நாளை ஆயுதங்களுடன், படைகளுடன் போருக்கு வருமாரு சொன்னார். இராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்கு என்பதை இராவணன் உணரவில்லை. மீண்டும் இராமருடன் போர் செய்ய நினைத்த இராவணன், “மயில்ராவணன்’ என்ற மற்றொரு அசுரனின் துணையுடன் போருக்கு வந்தான். இராமரை அழிக்க மயில்ராவணன் கொடிய யாகம் நடத்த திட்டமிட்டான். இந்த யாகம் நடந்தால் இராம இலட்சுமணரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று விபீஷணன் இராமரிடம் தெரிவித்தான். மயில்ராவணனை அழிக்க ஆஞ்சநேயரை அனுப்பினார் இராமன். நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்ற ஆஞ்சநேயருக்கு, அந்த தெய்வங்கள் தங்களின் சக்தியை அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார். இதனால்தான் ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகங்கள்.

          பன்னிரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோவில் அமைந்துள்ளது. இராமர், சீதை, இலட்சுமணன், சத்துருக்கனன், பரதன் ஆகியோர் ஒரு சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் 36 அடி உயர ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர விமானமும், அதன் மீது 5 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்ய லிஃப்ட் இருக்கிறது. இந்த மூலவருக்கு பாலாபிஷேகம் செய்ய 1008 லிட்டர் பால் தேவைப்படும். இங்குள்ள 1200 கிலோ எடையுள்ள மணியை ஒலித்தால் 8 கி.மீ. தூரம் ஒலிக் கேட்கும். திருக்கோயிலுக்கு ஒரு பெரிய தீர்த்த கிணறும் உள்ளது. இங்கு ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சந்தன மரத்தால் செய்யப்பட்டவை. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. இங்கே ஒரு மிதக்கும் கல்லும் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply