ஸ்ரீ சிங்கம்பிடாரி சேவுக பெருமாள் கோவில் வீடு கும்பாபிஷேக விழா!

செய்திகள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே குட்டிமேய்க்கிபட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிங்கம்பிடாரி சேவுகபெருமாள் கோவில் வீடு மகா குடமுழுக்கு பெருவிழா நடைபெற்றது.

Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!

மங்கல இசை முழங்க இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில் இரண்டு கால யாக பூஜையுடன் மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மகா பூர்ணாவூதி தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை, குட்டிமேய்க்கிபட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பாண்டியம்மாள் செல்வம் மற்றும் சேவுகபெருமாள் கோவில் பங்காளிகள் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை அலங்காநல்லூர் காவல் நிலையத்தினரும், சுகாதார பணிகளை, ஊராட்சி நிர்வாகமும் செய்திருந்தது.

சோழவந்தான் பச்சைவள்ளி காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்!

சோழவந்தான்: மதுரை அருகே, சோழவந்தான் வெள்ளை பிள்ளையார், பச்சைவள்ளி காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது .
பேட்டை கிராமத்தில், உள்ள வெள்ள பிள்ளையார் கோவில், பச்சைவள்ளி காளியம்மன் கோவில் ஆகிய கோவில்களின் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு, மேலூர் தெற்குதெரு மலை காசிராஜன் தலைமையில் மூன்று நாட்கள் யாக வேள்வி நடந்தது. தொடர்ந்து, நான்காம் காலை யாக கேள்விகள் நடைபெற்று, கோபூஜை,நாடி சாந்தினம்,வேத பாராயணம், பூர்ணாஹீதி நடந்தது.

இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகிகள் மேளதாளத்துடன் புனித நீர் குடங்களை எடுத்து கோவிலை வலம் வந்தனர். கருட ஜெபம் நடைபெற்று மகாகும்பாபிஷேகம் நடந்தது.
சிறப்புஅர்ச்சனை, பூஜைகள் நடைபெற்றது. பச்சைவள்ளி காளியம்மன் கோவில் பூசாரி கிருஷ்ணசாமி பிரசாதம் வழங்கினார்.

பேட்டை கிராம பொதுமக்கள் மற்றும் திருப்பணி குழுவினர் விழா ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்

Leave a Reply