திருப்பாணாழ்வார் அருளிய அமலனாதிபிரான்

திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார் அருளிச் செய்த

அமலனாதிபிரான்


அமலனாதிபிரான் தனியன்கள்


பெரிய நம்பிகள் அருளியது

ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயாநம்
மத்த்யே கவேர துஹிதுர் முதிதாந்தராத்மா
அத்ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோநிச்சிகாய மநவை முநிவாஹ நந்தம்.


திருமலை நம்பிகள் அருளியது

 

காட்டவே கண்ட பாதகமலம் நல்லாடை உந்தி,
தேட்டரும் உதரபந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்,
வாட்டம் இல் கண்கள் மேனி முனியேறித் தனிபுகுந்து,
பாட்டினால் கண்டு வாழும் பாணர்தாள் பரவினோமே.

 

திருப்பாணாழ்வார் அருளிச் செய்த

 

அமலனாதிபிரான்

927:
அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்,
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமலபாதம் வந்து என் கண்ணினுள வொக்கின்றதே. (2) (1)

928:
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற,

நிவந்த நீள்முடியன் அன்று நேர்ந்த நிசாசரரை,
கவர்ந்த வெம்கணைக் காகுத்தன் கடியார்பொழில் அரங்கத்தம்மான், அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே. (2)

929:
மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்,
அந்திபோல் நிறத்து ஆடையும் அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்திமேல் அது அன்றோ அடியேன் உள்ளத்து இன்னுயிரே. (2) (3 )

930:
சதுர மாமதிள்சூழ் இலங்கைக்கு இறைவன் தலைபத்து
உதிரவோட்டி, ஓர் வெம் கணை உய்த்தவன் ஓதவண்ணன்
மதுர மாவண்டு பாட மாமயில் ஆட அரங்கத்தம்மான், திருவயிற்று
உதரபந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே. (4)

931:
பாரமாய பழ வினை பற்று அறுத்து, என்னைத் தன்
வாரம் ஆக்கி வைத்தான் வைத்தது அன்றி என்னுள் புகுந்தான்,
கோர மா தவம் செய்தனன் கொல் அறியேன் அரங்கத்தம்மான், திரு
வார மார்பு அது அன்றோ அடியேனை ஆட்கொண்டதே. (5)

932:
துண்ட வெண்பிறையான் துயர் தீர்த்தவன், அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேயவப்பன் அண்டர்

அண்ட பகிரண்டத்து ஒரு மாநிலம் எழுமால் வரை, முற்றும் உண்ட

கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே. (6)

933:
கையினார் சுரிசங்கு அனல் ஆழியர், நீள்வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள்முடி எம்
ஐயனார், அணி அரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்,
செய்யவாய் ஐயோ. என்னைச் சிந்தை கவர்ந்ததுவே. (7)

934:
பரியனாகி வந்த அவுணன் உடல் கீண்ட, அமரர்க்கு
அரிய ஆதிபிரான் அரங்கத்து அமலன் முகத்து,
கரிய வாகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரியோடி, நீண்ட அப்
பெரிய வாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே. (8)

935:
ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய்,
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்,
கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே. (2) (9)

936:
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை,
அண்டர் கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள், மற்று ஒன்றினைக் காணாவே. (2) (10)

திருப்பாணாழ்வார் திருவடிகளே சரணம்

Leave a Reply