விநாயகரே போற்றி!

கிராமக் கோயில்

விநாயகரை வழிபடும் முறை:விநாயகரை ஒரு முறை வலம் வர வேண்டும். தலையில் குட்டிக்கொண்டு, தோப்புக் கரணம் போடுவது வழக்கம். ஜாதக ரீதியாக, கேது புக்தி கேது திசை உள்ளவர்கள் தினந்தோறும் விநாயகரைத் தவறாமல் வழிபட்டால் துன்பங்கள் குறைந்து, நன்மைகள் பெறலாம்.

விநாயகருக்கு உகந்தவை: விநாயகருக்கு அருகம்புல் மாலை மிக உகந்தது. வில்வ மாலை, எருக்கு மாலையும் சாத்தி வழிபடலாம். சதுர்த்தி அன்று மட்டும் துளசியால் அர்ச்சனை செய்யலாம் என்பர். ஜாதிப்பூ கொண்டு அர்ச்சனை செய்தால், ஞானம் பெருகும். அருகம்புல் அர்ச்சனையால் ஐசுவரியம் பெருகும். ஆரோக்கியம் வளரும்.

விநாயகருக்கு உகந்த பிரசாதங்கள்: அப்பம், பொரி, அவல், கொழுக்கட்டை, எள் உருண்டை, லட்டு.

Leave a Reply