திருப்பதி, மே 23 : திருமலை திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் மே 27-ல் ஹனுமன் ஜயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோவிலும், வனப்பகுதியில் இறங்கு வழிச் சாலையில் உள்ள பிரசன்ன ஆஞ்சநேயர் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்ள கோவில் நிர்வாகம் சார்பில் காலை 11 மணியிலிருந்து மாலை 6 மணி வரை இலவச பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
![](https://i0.wp.com/deivatamil.com/wp-content/uploads/2024/06/deivatamil-fallback-image.jpg?fit=1200%2C675&ssl=1)