சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக் கல்யாணம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

madurai chozhavanthan spiritual news

உலக வேண்டியும், ஆதிசங்கரர் ஜெயந்தி விழா!

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் ஒற்றை அக்ரஹாரத்தில் அமைந்துள்ள, ஶ்ரீ மலையாளம் ஶ்ரீ க்ருஷ்ணையர் வேத சாஸ்திர பாடக சாலையில், பாடசாலை அத்யாபகர் ஶ்ரீ வெ. வரதராஜ பண்டிட் , தலைமையில் பல வேத விற்பன்னர்களாலும், மற்றும், வேத பாடசாலை வித்யார்த்திகளாலும் அதி விமர்சையாக நடைபெற்றது.

மேற்படி, வைபவம் லோக க்ஷேமத்திற்காகவும், மழை வேன்டியும், குருவின் அருளால் அனைவரும் நலமாக இருக்க வேண்டியும், அன்று காலை 7.05 க்கு மேல் குரு வந்தனம், விக்னேஷ்வரர் பூஜை, புண்யாகவாசனம், ஶ்ரீ சங்கர பகவத் பாதாச்சார்யர் க்ராம ஊர்வலம், சங்கர பகவத் பாதர் த்யான ஆவாஹன சோடஷ உபசாரங்கள், சங்கர பகவத் பாத அஷ்டோத்திரம், மகன்யாச ருத்ர ஜெபம், உபநிஷத் பாராயணங்கள், அதனைத் தொடர்ந்து, கணபதி ஹோமம்,
ருத்ர ஹோமம், ம்ருத்யுஞ்சய ஹோமம், சொத்தாரா ஹோமம், மஹா பூர்நாஹுதி, சங்கர பகவத் பாத புணர் அர்ச்சனை, மஹா தீபாராதனை, மந்த்ர புஷ்பம், சதுர் வேத பாராயணம்,திராவிட வேதம், ஸ்தோத்ர பாராயணம்,
தட்சிணா மூர்த்தி அஷ்டகம், தோடகாஷ்டகம், சங்கர பகவத் பாத பிக்ஷா வந்தனம், மஹா தீபாராதனை, மற்றும் பிரசாதம் வழங்குதல் போன்றவை நடைபெற்றது.


சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம்

சோழவந்தான், மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு திரவுபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கடந்த திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புதன்கிழமை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை, முன்னிட்டு மேளதாளத்துடன் வடக்கு ரதவீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத் தலைவர் சுகுமாரன் மற்றும் நிர்வாகிகள் உட்பட பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்தனர். பிரசாத் சர்மா தலைமையில் திருக்கல்யாண யாகபூஜை நடந்தது.

பரம்பரை அறங்காவலர்கள் அர்ச்சுனன், திருப்பதி, ஜவஹர்லால், குப்புசாமி ஆகியோர் மாப்பிள்ளை விட்டார், பெண் வீட்டாராக இருந்து திருமணத்தை நடத்தி வைத்தனர்.

அனைவருக்கும் திருமாங்கல்ய பிரசாதம், முன்னாள் நிர்வாக பரம்பரை அறங்காவலர் ஆதிமூலம் பிள்ளை குடும்பத்தினர் சார்பாக, அன்னதானம் வழங்கப் பட்டது.பேரூராட்சித் தலைவர் ஜெயராமன், முன்னாள் பேரூராட்சித் தலைவர் எம். கே. முருகேசன், கமிட்டி செயலாளர் ஆதி பெருமாள், மதுரை மாநகராட்சி சுகாதார அலுவலர் விஜயகுமார், நகர கூட்டுறவு வங்கி பொது மேலாளர் வீரணன், முத்துக்குமரன் நகை மாளிகை உரிமையாளர் இருளப்பன் என்ற ராஜா, பைனான்சியர் முத்துராமன் மற்றும் கோவிலைச் சேர்ந்தவர்கள் உள்பட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மாலை திருவிளக்கு பூஜை . இரவு அம்மனும் சுவாமியும், யான வானத்தில் எழுந்தருளி கண்ணப்பர் ஒயிலாட்ட குழுவினருடன் வீதி உலாவும் நடைபெறும்.

உபயதார் செந்தில் என்ற தில்லை சிதம்பரம் பிரசாதம் வழங்கினார். சோழவந்தான் இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர். சோழவந்தான் பேரூராட்சி சுகாதார பணி மற்றும் கூடுதலாக தெருவிளக்கு வசதி, குடிநீர் வசதி செய்து இருந்தனர். நாளை மாலை சக்கரக்கோட்டை சைந்தவன் வதம், வெள்ளிக்கிழமை கருப்பட்டியில் பீமன் கீசகன், வருகிற சனிக்கிழமை சோழவந்தானில் பீமன் கீசகன் வதம் நடைபெறும். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகம் மற்றும் உபயதாரர் செய்து வருகின்றனர்.


பகவதி அம்மன் கோயில் திருவிழா: பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடக்கம்

நத்தம் : திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அசோக்நகர் பகவதி அம்மன் கோயில் வைகாசி திருவிழா , கொடியேற்றத்துடன் தொடங்கியது. கணபதி ஹோமம் நடந்ததை தொடர்ந்து, கன்னிமார் தீர்த்தம் எடுத்து சந்தனக் கருப்பு கோயிலை வந்தடைந்த பக்தர்களை மேளதாளம் முழங்க அதிர்வேட்டு, வர்ணக் குடை, தீவட்டி பரிவாரங்களுடன் கோயிலுக்கு அழைத்து சென்றனர். அங்கு ,பக்தர்கள் காப்புக் கட்டி விரதம் தொடங்கினர்.

இதையொட்டி , 10 நாட்கள் விழாவில் ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும் 21ந்தேதி பக்தர்கள் சந்தனக்குடம், பால்குடம், அக்கினிச்சட்டி எடுத்தல் நிகழ்ச்சியும், மாலையில் முளைப் பாரி ஊர்வலம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் காரணக்காரர்கள், விழாக் குழுவினர், அசோக்நகர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply