பூதத்தாழ்வார் அறிமுகம்

பூதத்தாழ்வார்
பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார் – அறிமுகம் !

எண்ணரும் சீர்ப் பொய்கை முன்னோர் இவ்வுலகில் தோன்றிய ஊர் *

வண்மை மிகு கச்சி மல்லை மாமயிலை * – மண்ணியில் நீர்

தேங்கும் குறையலூர் சீர்க்கலியன் தோன்றியவூர் *

ஓங்குமுறையூர் பாணனூர்.

– மணவாள மாமுனிகளின் உபதேச ரத்னமாலை

 

அவதரித்த ஊர் : திருக்கடன்மல்லை (மகாபலிபுரம்)

அவதரித்த மாதம் : ஐப்பசி

அவதரித்த நட்சத்திரம் : அவிட்டம்

அவதார அம்சம் : கதாம்சம்

அருளிச் செய்த பிரபந்தம் : இரண்டாம் திருவந்தாதி

—–
(குருபரம்பரைப் படி̷ 0;)

 

துலாச்ரவிஷ்டா ஸம்பூதம் பூதம் கல்லோலமலிந:

தீரே புல்லோத்பலாந்மல்லா புர்யாமீடே கதாம்சகம்.

 

ஸ்ரீகதாம்சத்தில்,

பொய்கையாழ்வார் அவதரித்த மறுதினமான நவமி திதி

புதன்கிழமை அவிட்ட நட்சத்திரத்தில்,

திருக்கடல்மல்லையென்னும் மகாபலிபுரத்தில்,

குருக்கத்திமலரிலே அயோநிஜராய் அவதரித்து,

ஸ்ரீமந்நாராயணனது திருவடிகளில்

அந்தரங்க பக்தியுள்ளவராய் எழுந்தருளியிருந்தார் பூதத்தாழ்வார்.

 

 

இவர் அருளிச் செய்த பிரபந்தம் இரண்டாம் திருவந்தாதி, 100 பாசுரங்கள்.

 

மங்களாசாஸனம் செய்தருளிய திவ்யதேசங்கள்-13{jcomments on}

Leave a Reply