682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்!275 ஆண்டுக்கு பின் தற்போது 2025ல் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த 1750ஆம் ஆண்டுக்குப் பிறகு, அதாவது 275 ஆண்டுகளுக்குப் பின், கேரள மாநிலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கேரளா தலைநகர் திருவனந்தபுரம் மையப் பகுதியில் கிழக்கு கோட்டையில் அனந்த பத்மநாபசுவாமி கோயிலில், 275 ஆண்டுகளுக்குப் பின்னா் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
இதில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்கள் மீது கலச நீர் தெளிக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தின் அடையாளமாக விளங்குகிறது பத்மநாபசுவாமி கோயில். இது உலகப் புகழ்பெற்ற கோயிலும் ஆகும். இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 8) காலை 7.40 முதல் 8.40 மணிக்குள் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கடந்த 2 ஆம் தேதி பிரசாதசுத்தி, 3 ஆம் தேதி பிராயசித்த ஹோம கலசம், 5 ஆம் தேதி சாந்தி ஹோம கலசம், 6 ஆம் தேதி திரவிய திவ்ய கலசமும் நடைபெற்றது.
இன்று அதிகாலை பிரதிஷ்டா பூதபலி நடைபெற்றது. தொடா்ந்து, குடமுழுக்கு வில்வமங்கலம் சாமியாா் மற்றும் மூத்த போற்றிமாா் தலைமையில் நடைபெற்றது.