குருவித்துறை, சோழவந்தான் கோயில்களில் குருப் பெயர்ச்சி பூஜை!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்


682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

#image_title

குருவித்துறை குருபகவான் கோவிலில் குரு பெயர்ச்சி முன்னேற்பாடுகள்!

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சித்திரை ரத வல்லப கோவிலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குரு பகவான் சன்னதியில் வருகின்ற 11ஆம் தேதி காலை 11 மணியளவில் குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.

ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகிறார். பரிகாரம் செய்ய வேண்டிய ராசிகள்: மேஷம் மிதுனம் கடகம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டியது முக்கியமாகும். விழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் வந்து செல்வர் குரு பெயர்ச்சி நடைபெறுவதை ஒட்டி மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் நிலையில் குரு பெயர்ச்சி விழாவிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் ஆங்காங்கே தற்காலிக நிழற்குடைகள் அமைத்து தருதல் மற்றும் குருவித்துறை முதல் குருபகவான் கோவில் வரை மற்றும் மதுரை மாவட்ட எல்லையான சித்தாதிபுரம் முதல் கோவில் வரை அனைத்து பகுதிகளிலும் குடிநீர் ஏற்பாடுகள் அமைத்தல் காவல் துறையினருக்கு வெப்பத்திலிருந்து தற்காலிக ஓய்வு எடுக்கும் வகையில் நிழல் செட்டுகள் அமைத்தல் கோவில் பகுதியில் தடையின்றி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தல் முக்கியமாக கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருதல் மருத்துவ உதவிகள் அவசரகால மருத்துவ வானங்களை நிறுத்துதல் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து குரு பகவான் சந்நிதி வரை தொடர்ச்சியாக பேருந்துகளை இயக்குவதற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகள் குறித்து, வாடிப்பட்டி வட்டாட்சியர் மற்றும் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோவில் செயல் அலுவலர் உள்ளிட்டோருடன் எம்.எல்.ஏ வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார்.

சோழவந்தான் விசாக நட்சத்திரக் கோவிலில்…

மதுரை மாவட்டம், சோழவந்தான் விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பிரளயநாதசாமி ஆலயத்தில் மே.11.ம் தேதி மாலை 4.30..மணிக்கு குருப்பெயர்ச்சி பூஜைகள் நடைபெறுகிறது.
இக் கோயிலில் ஸ்தல நாதர் ராகுவுக்கு அதிபதியாவார். ஸ்தல மூர்த்தி சனீஸ்வரலிங்கம், சனி,ராகு குருபகவான் இணைந்த புனித திருக்கோயில் ஆகும். இக் கோயிலில் பல ஆண்டுகளாக, சனிப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி யாக பூஜைகள் நடைபெறுகிறது.

மே.11..ம் தேதி ஞாயிற்றுக்கிழமை குருப்பெயர்ச்சியை முன்னிட்டு, குருபகவானுக்கு அபிஷேகமும், நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை  , தொழிலதிபர் எம்.வி.எம். மணி, கோயில் செயல் அலுவலர் ச. இளமதி, கவுன்சிலர்கள் டாக்டர் எம். மருதுபாண்டியன், வள்ளிமயில், கணக்கர் சி. பூபதி ஆகியோர்கள் செய்து வருகின்றனர்.

இதேபோல் மதுரை அண்ணாநகர் தாசில்தார் அருள்மிகு சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில் மே.11..ம் தேதி ஞாயிறு காலை 9.. மணிக்கு குருப் பிரீத்தி ஹோமம், நவகிரக ஹோமம், அபிஷேகம், பரிகார அர்ச்சணைகள் நடைபெறும். நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு, நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் நடைபெறும்



Leave a Reply