682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
![](https://i0.wp.com/deivatamil.com/wp-content/uploads/2025/02/e0ae95e0af81e0aeb0e0af81e0aeb5e0aebfe0aea4e0af8de0aea4e0af81e0aeb1e0af88-e0ae86e0aea4e0aebf-e0aeaee0aebee0ae9ae0aebee0aea3e0aebf.jpg?resize=640%2C360&ssl=1)
குருவித்துறை ஆதி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா!
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகில் கோவில் குருவித்துறை வேட்டார்குளம் அருகில் அமைந்துள்ள ஆதி மாசாணி அம்மன் கோவில் ஏழாம் ஆண்டு பூக்குழி திருவிழா நடைபெற்றது
திருவிழாவை முன்னிட்டு கடந்த 29ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது தொடர்ந்து நேற்று முன் தினம் இரவு மயான பூஜை நடைபெற்றது விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான வைகை ஆற்றிற்கு சென்று மாசாணி அம்மன் சக்தி கரகம் எடுத்து கோவிலுக்கு வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது
இதில் கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வைகை ஆற்றிற்கு சென்று சக்தி கரகம் எடுத்து கோவிலுக்கு வந்தனர் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது
முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பூக்குழி ஏழாம் தேதி மற்றும் முளைப்பாரி கரைத்தல் எட்டாம் தேதி நடைபெறுகிறது. சக்தி கரகம் மற்றும் அம்மனுக்கு பூமாலை அலங்காரம் ஏற்பாடுகளை மன்னாடி மங்கலம் அதிமுக தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி குடும்பத்தினர் செய்திருந்தனர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.