– Advertisement –
682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
![திருச்செந்தூரில் இன்று... தங்க முத்துக்கிடா வாகனத்தில் ஸ்வாமி எழுந்தருளல்! - Dhinasari Tamil](https://i0.wp.com/dhinasari.com/wp-content/uploads/2022/10/kamadenu_2022-10_b97366be-bf2e-495d-8f19-72a4bde6d5c8_thiruchendur_subramania_swamy_1599201691.jpg?resize=600%2C338&ssl=1)
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செப்.4 திங்கள் காலை ஆவணித் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கொடியேற்ற மகா தீபாராதனை நடைபெற்று திருவிழா தொடங்கியது.
ஆவணித் திருவிழா இரண்டாம் திருநாள் செப்.5 இரவு சுவாமி சிங்கக் கேடயச் சப்பரத்திலும், ஸ்ரீ வள்ளி அம்மன் மலர் கேடயச் சப்பரத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
மூன்றாம் திருநாளான புதன்கிழமை இன்று இரவு சுவாமி தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது.
இக்காட்சிகளின் வீடியோ…