திருவாய்மொழி ஒன்பதாம் பத்து

நம்மாழ்வார்

 

 

 

9ஆம் பத்து 6ஆம் திருவாய்மொழி

3728

உருகுமால் செஞ்சம் உயிரின் பரமன்றி,

பெருகுமால் வேட்கையும் எஞ்செய்கேன் தொண்டனேன்,

தெருவெல்லாம் காவி கமழ்திருக் காட்கரை,

மருவிய மாயன்தன் மாயம் நினைதொறே. (2) 9.6.1

 

3729

நினைதொறும் சொல்லுந் தொறும்நெஞ் சிடிந்துகும்

வினைகொள்சீர் பாடிலும் வேமென தாருயிர்,

சுனைகொள்பூஞ் சோலைத்தென் காட்கரை யென்னப்பா,

நினைகிலேன் நானுனக் காட்செய்யும் நீர்மையே. 9.6.2

 

3730

நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து,என்னை

ஈர்மைசெய் தென்னுயி ராயென் னுயிருண்டான்,

சீர்மல்கு சோலைத்தென் காட்கரை யென்னப்பன்,

கார்முகில் வண்ணன்தன் கள்வம் அறிகிலேன். 9.6.3

 

3731

அறிகிலேன் தன்னுள் அனைத்துலகம் நிற்க,

நெறிமையால் தானும் அவற்றுள்நிற் கும்பிரான்,

வெறிகமழ் சோலைத்தென் காட்கரை என்னப்பன்,

சிறியவென் னாருயி ருண்ட திருவருளே. 9.6.4

 

3732

திருவருள் செய்பவன் போலவென் னுள்புகுந்து,

உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான்,

திருவளர் சோலைத்தென் காட்கரை யென்னப்பன்,

கருவளர் மேனிஎன் கண்ணங்கள் வங்களே. 9.6.5

 

3733

எங்கண்ணன் கள்வம் எனக்குச்செம் மாய்நிற்கும்,

அங்கண்ண னுண்டவென் னாருயிர்க் கோதிது,

புங்கண்மை யெய்திப் புலம்பி யிராப்பகல்,

எங்கண்ண னென்றவன் காட்கரை யேத்துமே. 9.6.6

 

3734

காட்கரை யேத்தும் அதனுள்கண் ணாவென்னும்,

வேட்கைநோய் கூர நினைந்து கரைந்துகும்,

ஆட்கொள் வானொத்தென் னுயிருண்ட மாயனால்,

கோட்குறை பட்டதென் னாருயிர் கோளுண்டே. 9.6.7

 

3735

கோளுண்டான் அன்றிவந் தென்னுயிர் தானுண்டான்,

நாளுநாள் வந்தென்னை முற்றவும் தானுண்டான்,

காளநீர் மேகத்தென் காட்கரை யென்னப்பற்கு,

ஆளன்றே பட்டதென் ஆருயிர் பட்டதே. 9.6.8

 

3736

ஆருயிர் பட்ட தெனதுயிர் பட்டது,

பேரிதழ் தாமரைக் கண்கனி வாயதோர்,

காரெழில் மேகத்தென் காட்கரை கோயில்கொள்,

சீரெழில் நால்தடந் தோள்தெய்வ வாரிக்கே. 9.6.9

 

3737

வாரிக்கொண் டுன்னை விழுங்குவன் காணில் என்று

ஆர்வுற்ற என்னை யொழியவென் னில்முன்னம்

பாரித்து, தானென்னை முற்றப் பருகினான்,

காரொக்கும் காட்கரை யப்பன் கடியனே. 9.6.10

 

3738

கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரான்றன்னை,

கொடிமதிள் தெங்குரு கூர்ச்சட கோபஞ்சொல்,

வடிவமை யாயிரத் திப்பத்தி னால்,சன்மம்

முடிவெய்தி நாசங்கண் டீர்களெங் கானலே. (2) 9.6.11

Leave a Reply